This Article is From Mar 02, 2019

‘அபினந்தன் என்றால் வெல்கம் என அர்த்தம்… அது இனி மாறும்!’- பிரதமர் மோடி பேச்சு

கடந்த புதன் கிழமை, பாகிஸ்தான் விமானப்படையுடன் சண்டையிட்ட போது, விங் கமாண்டர் அபினந்தன் சென்ற மிக்-21 ரக போர் விமானம், சுட்டு வீழ்த்தப்பட்டது.

‘அபினந்தன் என்றால் வெல்கம் என அர்த்தம்… அது இனி மாறும்!’- பிரதமர் மோடி பேச்சு

பாகிஸ்தான் பிடியில் இருந்த இந்திய விமானப்படை போர் விமானி அபினந்தன் வர்தமன், நேற்று இரவு வாகா எல்லையில் பாகிஸ்தானால் ஒப்படைக்கப்பட்டார்.

New Delhi:

பாகிஸ்தான் பிடியில் இருந்த இந்திய விமானப்படை போர் விமானி அபினந்தன் வர்தமன், நேற்று இரவு வாகா எல்லையில் பாகிஸ்தானால் ஒப்படைக்கப்பட்டார். அவரை மீண்டும் தாய் நாட்டுக்கு வரவேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ‘அபினந்தன் என்றால் வெல்கம் என்று அர்த்தம். இனி அந்த வார்த்தையின் அர்த்தம் மாறும்' என்று பேசியுள்ளார். 

இன்று காலை டெல்லியில் பேசியுள்ள பிரதமர் மோடி, ‘இந்தியா என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை இந்த உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. அகராதியில் ஒரு வார்த்தைக்கான அர்த்தத்தையே மாற்றும் சக்தி இந்தியாவுக்கு உள்ளது. அபினந்தன் என்றால், வெல்கம் என்று அர்த்தம் இருந்தது. ஆனால் இனி அபினந்தன் என்ற வார்த்தைக்கான அர்த்தம் மாறும்' என்று கூறியுள்ளார். 

முன்னதாக பிரதமர் மோடி அபினந்தனை வரவேற்று, ‘தாயகத்துக்கு உங்களை வரவேற்கிறேன் விங் கமாண்டர் அபினந்தன்! உங்கள் வீரத்தை நினைத்து இந்த தேசம் பெருமை கொள்கிறது. நமது ராணுவம், 130 கோடி இந்தியர்களுக்கு ஓர் முன்னுதாரணம். வந்தே மாதரம்' என்று உணர்ச்சித் ததும்ப ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். 

கடந்த புதன் கிழமை, பாகிஸ்தான் விமானப்படையுடன் சண்டையிட்ட போது, விங் கமாண்டர் அபினந்தன் சென்ற மிக்-21 ரக போர் விமானம், சுட்டு வீழ்த்தப்பட்டது. இதனால், அபினந்தன் பாகிஸ்தான் எல்லைக்கு உட்பட்ட இடத்தில் பாராஷூட் மூலம் தரையிறங்கினார். பாகிஸ்தான் ராணுவம், அவரை கைது செய்தது. அவர் அந்நாட்டு அரசின் பிடியில் சுமார் 60 மணி நேரம் இருந்தார். இதையடுத்து, நேற்று இரவு 9:20 மணி அளவில் இந்தியாவிடம் அபினந்தனை ஒப்படைத்தது பாகிஸ்தான். 

கடந்த 50 ஆண்டுகள் இல்லாத வகையில் இந்தியா - பாகிஸ்தான் நாடுகள், சென்ற புதன் கிழமை வான் வழி சண்டையில் ஈடுபட்டன. அதில்தான் அபினந்தன், பாகிஸ்தான் தரப்பிடம் சிக்கினார். இதையடுத்து பாகிஸ்தான் தேசிய சட்டமன்றத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், ‘அமைதியை நிலைநாட்டும் நோக்கில் அபினந்தனை நாங்கள் விடுவிக்கிறோம்' என்று பேசினார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்ற சூழல் சற்றுத் தணிந்துள்ளது. 


 

.