This Article is From Sep 21, 2018

சென்னை விமான நிலையத்தில் தீப்பிடித்த பேருந்து… பயணிகள் மீட்பு!

இந்த தீ விபத்தில் பேருந்தில் சென்ற பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

சென்னை விமான நிலையத்தில் தீப்பிடித்த பேருந்து… பயணிகள் மீட்பு!

50 பயணிகளுடன் பேருந்து சென்று கொண்டிருந்தபோது தீப்பிடித்துள்ளது

சென்னை விமான நிலையத்தில் (Chennai Airport), இண்டிகோ (IndiGo) நிறுவனத்துக்குச் சொந்தமான பேருந்து ஒன்றில் திடீரென்று தீப்பிடித்துள்ளது. இந்த தீ விபத்தில் பேருந்தில் சென்ற பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்தில் 50 பயணிகள் இருந்துள்ளனர்.

விமான நிலையத்துக்குள் பயணிகளை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு அழைத்துச் செல்ல பயன்படுத்தப்படும் பேருந்தில் தான் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த விபத்தில் பயணிகளுக்கோ, பேருந்துக்கோ பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விமான நிலைய நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது. 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

.