This Article is From May 07, 2019

பாலியல் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட தலைமை நீதிபதி; கதறும் புகார் அளித்த பெண்!

மூவர் விசாரணைக் குழவில் நீதிபதி எஸ்.ஏ.போட்க், நீதிபதி இந்து மல்கோத்ரா மற்றும் நீதிபதி இந்திரா பானர்ஜி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

பாலியல் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட தலைமை நீதிபதி; கதறும் புகார் அளித்த பெண்!

பாலியல் புகார் அளித்த பெண் சென்ற வாரம் மூவர் குழு மீது அதிருப்தி தெரிவித்து, விசாரணையிலிருந்து விலகினார்.

New Delhi:

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக சில நாட்களுக்கு முன்னர், ஒரு பெண் பாலியல் புகார் கூறினார். நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை எழுப்பிய இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை செய்ய மூவர் அடங்கிய உச்ச நீதிமன்றக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு விசாரணையை நேற்று முடித்து, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிரான புகாரை தள்ளுபடி செய்தது. இந்நிலையில் பாலியல் புகார் அளித்த பெண் மூவர் குழு வழங்கிய தீர்ப்பு குறித்து, ‘மிகவும் வருத்தமளிக்கும் முடிவு. நான் மிகவும் அச்சத்தோடு இருக்கிறேன். நானும் எனது குடும்பமும் தாக்குதலுக்கு உள்ளாக வாய்ப்புள்ளதாக கருதுகிறேன்' என்று படபடத்துள்ளார். 

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி பெண் ஒருவர், உச்ச நீதிமன்றத்தில் உள்ள அனைத்து நீதிபதிகளுக்கும் கடிதம் எழுதினார். இந்த குற்றச்சாட்டை ரஞ்சன் கோகாய் மறுத்த நிலையில், இதுகுறித்து விசாரிக்க 2 பெண்கள் உள்பட 3 பேர் கொண்ட நீதிபதிகள் குழு அமைக்கப்பட்டது. 

'ஏப்ரல் 19-ம் தேதி அளிக்கப்பட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான புகார் குறித்து விசாரிக்க மூவர் குழு அடைக்கப்பட்டது. அந்த குழு நடத்திய விசாரணையின் முடிவில் நீதிபதி கோகாய் மீதான புகாருக்கு எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லை என்று தெரியவந்துள்ளது' என்று விசாரணை முடித்த பின்னர் உச்ச நீதிமன்ற தரப்பு தெரிவித்தது. 

இந்நிலையில் புகார் அளித்த பெண், இந்த விவாகரம் குறித்து மேலும் அறிக்கை மூலம் தெரிவிக்கையில், ‘நலிந்த பிரிவினருக்கு நாம் நாட்டில் இருக்கும் அமைப்புகள், நீதி வழங்கும் என்ற நம்பிக்கையை இழக்கும் நிலையில் நான் இருக்கிறேன்' என்றுள்ளார். அந்தப் பெண் சென்ற வாரம் மூவர் குழு மீது அதிருப்தி தெரிவித்து, விசாரணையிலிருந்து விலகினார்.

மூவர் குழவில் நீதிபதி எஸ்.ஏ.போட்க், நீதிபதி இந்து மல்கோத்ரா மற்றும் நீதிபதி இந்திரா பானர்ஜி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். நேற்று மீண்டும் விசாரணைக்கு அழைப்பு விடுத்திருந்த போது, தலைமை நீதிபதி கோகாய் அமர்வின் முன் ஆஜரானார். 

இந்த மொத்த விவகாரம் குறித்து தலைமை நீதிபதி கோகாய், ‘என் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் புகாரை முற்றிலும் மறுக்கிறேன். நான் பல முக்கிய வழக்குகளை விசாரிப்பதால் இப்படிப்பட்ட குற்றச்சாட்டுக்கு ஆளாக்கப்படுடள்ளேன். இந்த புகார்களுக்குப் பின்னர், நீதித் துறையை கவிழ்க்க ஒரு மிகப் பெரிய சக்தி இருக்க வேண்டும். நீதித் துறையின் சுதந்திரம் கேள்விக்குறியான நிலையில் உள்ளது' என்று விளக்கம் அளித்தார். 


 

.