This Article is From Sep 30, 2018

ஒசாமா பின்லேடனுக்கு பாகிஸ்தானே அடைக்கலம் கொடுத்தது: சுஷ்மா கடும் தாக்கு!

உலகமே தற்போது பெரும் சவாலாக ஏதிர்கொள்வது பருவநிலை மாற்றத்தையும், பயங்கரவாதத்தையும்தான். எங்களது அண்டை நாடான பாகிஸ்தான்

வளர்ந்த நாடுகள், பொருளாதார மற்றும் தொழில்நுட்ப உதவிகள் வழங்கி பின்தங்கிய நாடுகளை உயர்த்த வேண்டும்.

New York:

ஐக்கிய நாடுகள் சபையின் 73-வது பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், உலகமே தற்போது பெரும் சவாலாக ஏதிர்கொள்வது பருவநிலை மாற்றத்தையும், பயங்கரவாதத்தையும்தான். எங்களது அண்டை நாடான பாகிஸ்தான், பயங்கரவாதத்திற்கான அடித்தளமாக உள்ளது. இதனை உறுதிபடுத்தும் வகையில் பாகிஸ்தானே ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்தது என பாகிஸ்தானை அவர் கடுமையாக சாடினார்.

ஐ.நா சபை பொதுக்கூட்டத்தில் சுஷ்மா சுவராஜ் நிகழ்த்திய உரையின் முக்கியம்சங்கள்,

1. பருவநிலை மாற்றமும், பயங்கரவாதமும் உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாக உள்ளது.

2. பருவநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய மோசமான விளைவுகளில் இருந்து உலகை காக்க, வளர்ந்த நாடுகள், பொருளாதர மற்றும் தொழில்நுட்ப உதவிகள் வழங்கி பின்தங்கிய நாடுகளை உயர்த்த வேண்டும்.

3. பயங்கரவாதத்தை பரப்புவதில் எங்களது அண்டை நாடு நிபுணத்துவம் பெற்றதாக உள்ளது. வேறு எங்கும் இல்லாமல், பயங்கரவாதத்தை எங்களது அண்டை நாடு வளர்த்து வருகிறது. அவர்கள் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவத்தில்லை. மாறாக பேச்சுவார்த்தை மூலம் சமாளிப்பதில் மட்டும் கைதேர்ந்தவர்களாக உள்ளனர்.

4. பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தைகளை நிராகரிப்பதன் மூலம் நாங்கள் குற்றம்சாட்டப்பட்டவர்களாக உள்ளோம். பேச்சுவார்த்தைகள் சுமூக தீர்வை தரும் என நம்புகிறோம். ஆனால், பாகிஸ்தானுடன் நாங்கள் பலமுறை பேச்சுவார்த்தை நடத்திவிட்டோம். இன்னும் பயங்கரவாத தாக்குதல்களை கட்டுப்படுத்த முடிவதில்லை.

5. ஒசாமா பின்லேடன் அமெரிக்காவின் மிக ஆபத்தான எதிரியாக அறிவிக்கப்பட்ட போது, உலக நாடுகளில் பின்லேடனை தீவிரமாக தேடியது அமெரிக்கா. அந்த சமயத்தில் பின்லேடனுக்கு அடைக்களம் கொடுத்தது, அமெரிக்காவின் நட்பு நாடான பாகிஸ்தான் தான்.

6. பயங்கரவாதிகளை விட மனித உரிமைகளை அதிகமாக மீறுவது யார்? பயங்கரவாதிகளை நியாப்படுத்தும் பாகிஸ்தான், அவர்களால் பாதிக்கப்படுபவர்களை கருத்தில் கொள்வதில்லை.

7. கடந்த 5 வருடங்களில், ஒவ்வொரு வருடமும் நடைபெறும் ஐ.நா பொதுக்கூட்டத்தில் பயங்கரவாதம் குறித்தும் அதனை பாதுகாப்பவர்கள் குறித்தும் இந்தியா தவறாமல் பேசி வருகிறது. பயங்கரவாதிகளையும், அவர்களை ஆதரிப்பவர்களையும் சர்வதேச சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

8. ஐக்கிய நாடுகளின் சபையில் உறுப்பினராக இருக்கக்கூடிய நாடு, பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி வழங்கியும், ஆயுதங்களை வழங்கியும் அவர்கள் நாட்டின் விடுதலை வீரர்கள் போல் கொண்டாடுகிறார்கள்.

.