This Article is From Jun 11, 2020

கொரோனாவுக்கு எதிரான போரை நமக்கான திருப்புமுனையாக மாற்ற வேண்டும்: பிரதமர் மோடி

இந்த நெருக்கடிகளை நாம் ஒரு வாய்ப்பாக மாற்ற வேண்டும், அதை ஒரு திருப்புமுனையாக மாற்ற வேண்டும். இந்தியாவை சுயசார்பாக மாற்றிக் கொள்ள கொரோனா நமக்கு வாய்ப்பளித்துள்ளது. 

கொரோனாவுக்கு எதிரான போரை நமக்கான திருப்புமுனையாக மாற்ற வேண்டும்: பிரதமர் மோடி

New Delhi:

கொரோனாவுக்கு எதிரான நெருக்கடி நாட்டிற்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்றும், சுயசார்பு இந்தியாவுக்கான பணியை வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

வங்காளத்தின் வணிகத் தலைவர்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, மக்களும், கிரகமும், லாபமும் இணைந்திருந்தால், ஒன்றாக வளர்வது என்பது சாத்தியமாகும் என்று தெரிவித்துள்ளார். 

இந்திய வர்த்தக சபையின் (ஐ.சி.சி) 95வது ஆண்டு நிறைவு கூட்டத் தொடரில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது, நம் நாடு பல சவால்களைச் சந்தித்துள்ளது. நாம் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுகிறோம், அதோடு இன்னும் பல நெருக்கடிகளும் உருவாகியுள்ளன. நாட்டின் இரண்டு வெவ்வேறு பகுதிகளில் வெள்ளம், வெட்டுக்கிளிகள், எண்ணெய் வயல்களில் ஏற்பட்ட தீ, பூகம்பங்கள் மற்றும் புயல் உள்ளிட்ட அனைத்தையும் எதிர்த்து போராடுகிறோம். 

இந்த நெருக்கடிகளை நாம் ஒரு வாய்ப்பாக மாற்ற வேண்டும், அதை ஒரு திருப்புமுனையாக மாற்ற வேண்டும். இந்தியாவை சுயசார்பாக மாற்றிக் கொள்ள கொரோனா நமக்கு வாய்ப்பளித்துள்ளது. 

"நமது தீர்மானமும், நமது பலமுமே நமது பிரச்சினைகளுக்கு மிகப்பெரிய தீர்வளிக்கும்."

இறக்குமதி செய்ய நிர்ப்பந்திக்கப்படும் அனைத்து பொருட்களும் இந்தியாவிலே தயாரிக்கப்பட்டு, இறுதியில் பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவதை உறுதிசெய்ய நாட்டு மக்கள் முயற்சி எடுக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

கொல்கத்தா மீண்டும் ஒரு பெரும் தலைமையாக முடியும். வங்காளம் இன்று என்ன நினைக்கிறதோ, அதனையே இந்தியா நாளை நினைக்கும்," என்று அவர் கூறினார்.
 

.