This Article is From Feb 13, 2019

மகனின் திருமணத்திற்காக மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்த அம்பானி

முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கும், ஷ்லோகா மேத்தாவுக்கும் இடையே அடுத்த மாதம் திருமணம் நடைபெறவுள்ளது.

மகனின் திருமணத்திற்காக மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்த அம்பானி

ஸ்டாலின் குடும்பத்தினருடன் முகேஷ் மற்றும் நீதா அம்பானி

New Delhi:

மகனின் திருமணத்திற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து முகேஷ் அம்பானியின் குடும்பத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானிக்கு ஆகாஷ் அம்பானி என்ற மகன் உள்ளார். அவருக்கும் வைர வியாபாரி ரஸல் மேத்தாவின் மகள் ஷ்லோகா மேத்தாவுக்கும் இடையே திருணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இருவரும் அடுத்தமாதம் திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.

ஆகாஷ் அம்பானியும் - ஷ்லோகா மேத்தாவும் சிறுவயது முதல் நண்பர்களாக இருக்கின்றனர். கடந்த ஆண்டு ஜூலை மாதத்தின்போது இருவருக்கும் இடையே திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

lakml2b8

முன்னதாக முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கு கடந்த டிசம்பரில் திருமணம் நடந்தது. அதில் அமிதாப் பச்சன், ஷாரூக் கான், ஆமிர் கான், அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

மேலும் படிக்க -"நாடும் நமதே… 40-ம் நமதே…”- காங்., செயல் தலைவர் Dr. K. ஜெயக்குமார்

.