This Article is From May 02, 2019

போபாலில் 12 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த நபர்கள் கைது

அடுத்தநாள், சிறுமியின் குடும்பத்தினர் காவல் நிலையத்தி புகார் அளித்தனர். சிறுமியைக் கொன்றவர்கள் வீட்டின் அருகிலேயே இருக்கு இளைஞர்கள் என்று தெரிய வந்த நிலையில் இளைஞர்களும் அந்த டீன் ஏஜ் பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.

போபாலில் 12 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த நபர்கள் கைது

Bhopal rape case: சிறுமியைக் கடத்தி ஆளில்லா இடத்தில் வைத்து வன்புணர்வு செய்துள்ளனர்

ஹைலைட்ஸ்

  • 12 வயது சிறுமியை வன்புணர்வு செய்து கல்லைத் தூக்கிப்போட்டு கொலை செய்துள்ளன
  • இந்த சம்பவம் கோவிலுக்கு செல்லும் வழியில் நடைபெற்றது.
  • மத்திய பிரதேசத்தில் பாலியல் கொலைக் குற்றங்கள் அதிகரித்துள்ளன.
Bhopal:

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் 12 வயது சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அந்த சிறுமியின் டீன் ஏஜ் வயதுடைய உறவினர் பெண்ணுக்கு இந்தக் குற்றத்தில் பங்கிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

செவ்வாய்க்கிழமை மாலை 16 வயது பெண்ணுடன் பாதிக்கப்பட்ட சிறுமி கோயிலுக்குச் சென்றுள்ளார். அப்போது குற்றம் சாட்டப்பட்ட ஆண்கள் இருவரும் அந்த சிறுமியை பலவந்தமாக இழுத்துச் சென்றுள்ளனர். சிறுமியை வன்புணர்வு செய்துஅருகில் இருந்த கல்லை தலையில் போட்டு கொலையும் செய்துள்ளனர். அந்த சிறுமியை கடத்திச் சென்ற பின் 16 வயதுப் பெண்ணைக் காணவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

அடுத்தநாள், சிறுமியின் குடும்பத்தினர் காவல் நிலையத்தி புகார் அளித்தனர். சிறுமியைக் கொன்றவர்கள் வீட்டின் அருகிலேயே இருக்கு இளைஞர்கள் என்று தெரிய வந்த நிலையில் இளைஞர்களும் அந்த டீன் ஏஜ் பெண்ணும் கைது செய்யப்பட்டனர். கடந்த ஜூலை மாதம் ஏழுவயதான பெண்ணை இரு ஆண்கள் வன்புணர்வு செய்து கழுத்தை அறுத்துக் கொன்றனர். இந்த வழக்கு பல ஆர்ப்பாட்டங்களுக்கு வழி வகுத்தது. கொடூர குற்றங்களை செய்பவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர்.

மத்திய அரசின் எதிர்க் கட்சித் தலைவர்  பிரக்யா தகூர் “ மத்திய பிரதேசம் பாலியல் வன்முறைகள் அதிகளவு நடக்கும் மாநிலமாக உள்ளது. எங்கள் சகோதரிகள் -மகள்கள் பாதுகாப்பான சூழலை எப்போது பெறப்போகிறார்கள்? ” என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

2016 மற்றும் 2017 ஆண்டில் அதிகளவு பாலியல் குற்ற வழக்குகளை பதிவு செய்த மாநிலமாக மத்திய பிரதேசம் உள்ளது. 

.