This Article is From May 01, 2020

புலம் பெயர் தொழிலாளர்களை தெலுங்கானாவிலிருந்து, ஜார்கண்டிற்கு கொண்டு சேர்கிறது சிறப்பு ரயில்!

ஏறத்தாழ 1,200 தொழிலாளர்களை இந்த சிறப்பு ரயில், தெலுங்கானாவிலிருந்து ஜார்க்கண்டின் ஹதியா மாவட்டத்திற்கு ஏற்றிச் சென்றது.

மார்ச் 25 ஆம் தேதி பூட்டுதல் தொடங்கியதால் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலைகள் இல்லாமல் தவித்தனர்.

New Delhi:

தேசிய அளவில் முன்னேற்பாடுகள் இல்லதா வகையில் திடீரென அமலாக்கப்பட்ட முழு முடக்க(LOCKDOWN) நடவடிக்கையின் காரணமாக அனைத்து தொழில்கள் மற்றும் போக்குவரத்தும் முற்றிலுமாக முடக்கப்பட்டது. இதனால் லட்சக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள் பல மாநிலங்களில் சிக்கித்தவித்தனர். இவ்வாறு சிக்கித்தவித்த தொழிலாளர்கள் பலர் ஆயிரம் மைல்கள் வரை நடந்தே தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் சென்றடைய நடக்கத்தொடங்கினர். அதில் சிலர் வழியிலேயே உயிரிழந்தனர். இதனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசானது, புலம் பெயர் தொழிலாளர்கள் எங்குத் தங்கியுள்ளார்களோ அந்த மாநில அரசுகளே அவர்களை பாதுகாக்க நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. ஆனால், மத்திய அரசின் அறிவுறுத்தல்கள் தோல்வியில் முடிந்த நிலையில் மீண்டும் தொழிலாளர்கள் நடக்கத் தொடங்கினர். இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில், லிங்கம் பள்ளியில் தங்கியிருந்த ஜார்கண்டை சார்ந்த புலம் பெயர் தொழிலாளர்களை சிறப்பு ரயில் மூலம் தெலுங்கானாவிலிருந்து ஜார்க்கண்டின் ஹதியா மாவட்டத்திற்கு தெலுங்கானா அனுப்பியுள்ளது.

ஏறத்தாழ 1,200 தொழிலாளர்களை இந்த சிறப்பு ரயிலில், தெலுங்கானாவிலிருந்து ஜார்க்கண்டின் ஹதியா மாவட்டத்திற்கு பயணிக்கின்றனர். 24 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலில் ஒரு பெட்டியில் 72 பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், தற்போது தனி மனித விலகலை மையப்படுத்தி, 54 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சிறப்பு ரயிலானது தெலுங்கானா மாநில அரசின் கோரிக்கையை ஏற்று இயக்கப்பட்டது என ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இரு மாநில அரசுகள் கோரிக்கை விடுத்தபின்னர் அதை பரிசீலித்து ரயில்வே துறை ரயில்களை இயக்க அனுமதிக்கும் என ரயில்வே அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

"புலம் பெயர் தொழிலாளர்களைத் திரும்ப அழைத்து வருவதற்கான மாநில அரசின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. உடனடியாக அவர்களைப் பாதுகாப்பாகத் திரும்ப அழைத்து வருவதற்கான பணிகளை ஜார்கண்ட் மாநில அரசு துவங்கியுள்ளது ". என அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் இன்று காலை ட்வீட் செய்திருந்தார். மேலும், வெளி மாநிலங்களில் தங்கி படிக்கின்ற மாணவர்களைப் போலவே நம் மாநிலத்திலிருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களும் நமக்கு முக்கியம்.ஒவ்வொரு ஜார்கண்ட் மாநில தொழிலாளியின் பாதுகாப்பும் நமக்கு முக்கியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக இதே போல ஜார்கண்ட் மாநிலத்தில் சிக்கியிருந்த உத்தரப் பிரதேச தொழிலாளர்களை அழைத்துவர மத்திய அரசு அனுமதித்திருந்தது. இம்மாதிரியான வெளிப்படையான போக்குவரத்து என்பது தொற்று பரவலை அதிகரிக்கக்கூடும் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் விமர்சித்திருந்தார். இதுபோலவே முழு முடக்க (LOCKDOWN) நடவடிக்கைகளை மீறுவது குறித்து முன்னதாக ஜார்கண்ட் அரசும் கேள்வியெழுப்பியிருந்தது.

தற்போது புலம் பெயர் தொழிலாளர்களின் நிலைமையானது மத்திய அரசுக்கு பெரும் விமர்சனத்தை உருவாக்கியிருப்பதால் இவ்வாறு தொழிலாளர்களைச் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப அனுமதியளிக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.

முன்னதாக மத்திய அரசு புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. அதன் பின்னர் பேரிடர் மீட்பு கட்டமைப்புகளைப் பலப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.

இந்த நிலையில் மத்திய அரசால் இயக்கப்படக்கூடிய சிறப்பு ரயில்கள் மட்டுமே பிரச்சனையைத் தீர்க்க உதவும் என கடந்த வாரம் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெஹ்லோட் தெரிவித்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக, “ஜார்கண்டில் போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தினால் பிரதமர் நரேந்திர மோடி, தெலுங்கானாவில் சிக்கியுள்ள ஜார்கண்ட் புலம் பெயர் தொழிலாளர்களை மீட்க கட்டணமில்லா சிறப்பு ரயிலினை இயக்க வேண்டும்.“ என ஜார்கண்ட் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் பன்னா குப்தா பி.டி.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். மேலும், ஒன்பது லட்சம் புலம் பெயர் தொழிலாளர்கள் மாநிலத்திற்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும், அவர்கள் அனைவருக்கும் தொற்று பரிசோதனை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் குப்தா தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் விதிக்கப்பட்டுள்ள முழு முடக்க நடவடிக்கையானது மே 3-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் தெலுங்கானா மாநில அரசு மே 7 வரை தங்கள் மாநிலங்களில் ஊரடங்கினை நீட்டிப்பதாகத் தெரிவித்திருக்கிறது. தொற்று பாதிப்புகள் முழு முடக்க நடவடிக்கையினால் குறையாத நிலையில் தற்போது முழு முடக்கம் நீட்டிக்கப்படுமா என்கிற கேள்வியெழுந்துள்ளது. ஆனால்  மறு புறம் பொருளாதாரம் கடும் பாதிப்பினை சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

World

67,69,38,430Cases
62,55,71,965Active
4,44,81,893Recovered
68,84,572Deaths
Coronavirus has spread to 200 countries. The total confirmed cases worldwide are 67,69,38,430 and 68,84,572 have died; 62,55,71,965 are active cases and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 10:54 am.

India

4,50,19,214 475Cases
3,919 -83Active
4,44,81,893 552Recovered
5,33,402 6Deaths
In India, there are 4,50,19,214 confirmed cases including 5,33,402 deaths. The number of active cases is 3,919 and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 8:00 am.

State & District Details

State Cases Active Recovered Deaths

With input from PTI

.