This Article is From Mar 13, 2019

எடியூரப்பா கருத்தா? அல்லது பிரதமர் மோடியின் கருத்தா? வைகோ கேள்வி

சர்ச்சைக்குரிய விதத்தில் எடியூரப்பா பேசி வருவது அவரது சொந்த கருத்தா அல்லது பிரதமர் மோடியின் கருத்தா என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுளார்.

எடியூரப்பா கருத்தா? அல்லது பிரதமர் மோடியின் கருத்தா? வைகோ கேள்வி

சர்ச்சைக்குரிய விதத்தில் எடியூரப்பா பேசி வருவது அவரது சொந்த கருத்தா அல்லது பிரதமர் மோடியின் கருத்தா என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுளார்.

இதுகுறித்து மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வைகோ கூறியதாவது,

நாடாளுமன்றத் தேர்தலில் 22 தொகுதிகள் கர்நாடகாவில் வெற்றி பெற்றாலே, சட்டசபையையே மாற்றி அமைப்போம் என்பது போன்ற தவறான கருத்துக்களை அவ்வப்போது பேசி வருகிறார் எடியூரப்பா.

அது மட்டுமா? சரிந்து கொண்டு இருந்த பாஜகவின் செல்வாக்கு புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு வானுயர உயர்ந்து கொண்டு இருக்கிறது என்று அதனை வைத்து வாக்கு வங்கியை உயர்த்தலாம் என்ற சொன்ன கருத்தும் அவர் கருத்தா? அல்லது பிரதமர் நரேந்திர மோடியின் கருத்தைப் பிரதிபலிக்கிறாரா? என்று தெரியவில்லை. ராணுவ வீரர்கள் அனைவரும் 120 கோடி இந்தியர்களுக்கும் சொந்தக்காரர்கள் இதனை எப்படி அவர்கள் உரிமை கொள்ள முடியும்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பல லட்சம் பேர் பங்கேற்கிற சித்திரைத் திருவிழாவின்போது மதுரை பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதனால் வாக்குப்பதிவு சதவீதம் பாதிக்கும் என நான் கருதுகிறேன். 18-ந் தேதி தேர்தலை நடத்தாமல் வேறு தேதியில் தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது.

பொள்ளாச்சி சம்பவம் குலை நடுங்க வைக்கிறது. அந்தக் குற்றத்தை செய்த கயவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் பிடியில் கூண்டில் நிறுத்தப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இந்தக் கயவர்கள் பின்னணியில் யார் இருந்தாலும், அவர்களைக் காப்பாற்ற யார் முனைந்து இருந்தாலும், அவர்களும் கண்டறியப்பட்டு, அவர்களும் சட்டத்தின் பிடியில் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.

தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். அகில இந்திய அளவில் பாஜக கூட்டணி மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

.