சீனாவில் கடந்த திங்கட்கிழமையன்று தீ விபத்தில் சிக்கிய இரண்டு பெரியவர்களை அக்கம்பக்கத்தினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சேர்ந்து மீட்டனர்.
ஹினான் மாகாணத்தில் உள்ள லூகோய் நகரத்தை சேர்ந்த ஒரு வீட்டில் இரண்டு முதியவர்கள் மட்டும் இருந்த நிலையில் திடீரென தீ பற்றியது. இதைக்கண்ட அண்டை வீட்டு நபர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஒன்றிணைந்து காப்பாற்றினர்கள்.
அவர்களை காப்பாற்ற நவீன உபகரணங்கள எதுவுமில்லாமல் வெறும் கைகள் மற்றும் கம்புகள் கொண்டு வீட்டின் கண்டாடியை உடைத்து அந்த முதியவர்களை காயங்கள் ஏதுமின்று பத்திரமாக மீட்டனர்.
இந்த பயங்கரமான தீவிபத்திலிருந்து பெரியவர்களை மீட்ட சம்பவத்தின் வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வைரலான நிலையில் பல லட்சம் லைக்குகளும் பகிர்வுகளையும் பெற்றது.
மனிதநேயத்தை நிலைநாட்டும் இந்த வீடியோக்காட்சிகள் மக்களிடையே யாராக இருந்தாலும் காப்பாற்ற வேண்டும் என்ற நல்ல கருத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Click for more
trending news