This Article is From Jul 29, 2020

அன்லாக்3: நாடு முழுவதும் 3-ம் கட்ட தளர்வுகளை வெளியிட்டது மத்திய அரசு!

அதே போல மெட்ரோ போக்குவரத்து மற்றும் மக்கள் அதிகம் கூடும் நிகழ்வுகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அன்லாக்3: நாடு முழுவதும் 3-ம் கட்ட தளர்வுகளை வெளியிட்டது மத்திய அரசு!

நாடு முழுவதும் கொரோனா தொற்று எண்ணிக்கை 15 லட்சத்தினை கடந்திருக்கக்கூடிய நிலையில், தற்போது அன்லாக் செயல்முறையின் மூன்றாம் கட்ட அறிவிப்பினை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இதில் ஏற்கெனவே நடைமுறையில் இருந்த இரவு நேர ஊரடங்கு முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டுப்பாட்டு மண்டலங்களில் இல்லாத உடற் பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா நிலையங்களை திறக்க ஆகஸ்ட் 5 முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள், நீச்சல் குளங்கள், பூங்காக்கள்,  பார்கள் மற்றும் திரையரங்குகள் போன்றவற்றிற்கு ஆகஸ்ட் 31 வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதே போல மெட்ரோ போக்குவரத்து மற்றும் மக்கள் அதிகம் கூடும் நிகழ்வுகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

.