This Article is From May 01, 2019

கோவையில் காட்டு யானை மிதித்து 60 வயது பாட்டி உயிரிழப்பு!!

வீட்டின் வெளியே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியை யானை மிதித்து கொன்றுள்ளது.

கோவையில் காட்டு யானை மிதித்து 60 வயது பாட்டி உயிரிழப்பு!!

சம்பவ இடத்திலேயே மூதாட்டி உயிரிழந்துள்ளார்.

Coimbatore:

கோவையில் காட்டு யானை மிதித்து 60 வயது மூதாட்டி உயிரிழந்துள்ளார். கோருண்யா நகரில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

கோடை வெப்பம் காரணமாக வீட்டிற்கு வெளியே 60 வயது பாட்டி தூங்கிக் கொண்டிருந்தார். இன்று அதிகாலையில் அங்கு வந்த காட்டு யானை ஒன்று பாட்டியை தாக்கி மிதித்துள்ளது.

இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்த தகவலை போலீசார் தெரிவித்தனர்.

.