நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று அக்கட்சியின் தலைமை அலுவலகமான ராவணன் குடிலில், ஈ.வே.ரா பெரியாரின் நினைவு தினத்தையொட்டி, மலர் தூவி மரியாதை செய்துள்ளார்.
இது குறித்து சீமான் தனது முகநூல் பக்கத்தில், ‘பெண்ணிய உரிமை, சாதி ஒழிப்பு, சமூக நீதி, தீண்டாமை ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு உள்ளிட்ட களங்களில் சற்றும் சமரசமின்றிப் போராடிய கலகக்காரர் ஐயா பெரியார் அவர்களின் 45ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி இன்று 24-12-2018 திங்கட்கிழமை காலை 10 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான இராவணன் குடிலில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது' என்று பதிவிடப்பட்டுள்ளது.
இன்று பெரியாரின் நினைவு தினத்தையொட்டி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அமைப்புகளும் அவரின் சிலைக்கும், உருவப் படத்துக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.