This Article is From Aug 20, 2020

பாடும் நிலா.. எழுந்து வா! எஸ்.பி.பி குணமடைய கூட்டு பிரார்த்தனைக்கு ரஜினி அழைப்பு!

அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்தும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், பாடும் நிலா.. எழுந்து வா! கூட்டுப் பிரார்த்தனை செய்வோம்.. என்று தெரிவித்துள்ளார்.

பாடும் நிலா.. எழுந்து வா! எஸ்.பி.பி குணமடைய கூட்டு பிரார்த்தனைக்கு ரஜினி அழைப்பு!

பாடும் நிலா.. எழுந்து வா! எஸ்.பி.பி குணமடைய கூட்டு பிரார்த்தனைக்கு ரஜினி அழைப்பு!

Chennai:

பாடகர் எஸ்.பி.பி விரைவில் குணமடைய கூட்டு பிரார்த்தனைக்கு நடிகர் ரஜினிகாந்த் அழைப்பு விடுத்துள்ளார். 

தமிழ் சினிமாவின் முன்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடக்கத்தில் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, தான் நலமுடன் இருப்பதாக எஸ்.பி.பி வீடியோவில் கூறியிருந்த நிலையில், பின்னர் அவரது உடல்நிலை மோசமானது. 

இதையடுத்து, தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள எஸ்.பி.பி.க்கு வென்டிலேட்டர், எக்மோ கருவிகளை கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எஸ்.பி.பி.யின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், உயிர்காக்கும் மருத்துவ கருவிகளை கொண்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், எஸ்.பி.பி. உடல்நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று இன்று மாலை 6 மணியளவிஃ அவரவர் வீட்டில் இருந்தபடியே கூட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும் என பிரபலங்கள் பலரும் கோரிக்கை வடுத்து வந்தனர். 

அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்தும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், பாடும் நிலா.. எழுந்து வா! கூட்டுப் பிரார்த்தனை செய்வோம்.. எஸ்.பி.பியை மீட்டெடுப்போம். இன்று மாலை 6.00 முதல் 6.05 வரை என்று தெரிவித்துள்ளார். 

.