This Article is From May 11, 2020

நாளை முதல் குறிப்பிட அளவு பயணிகள் ரயில் இயங்கும்: இன்று முன்பதிவு தொடக்கம்!

டெல்லியிலிருந்து புறப்பட்டு அசாம், வங்காளம், பீகார், சத்தீஸ்கர், குஜராத், ஜம்மு, ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா, தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் திரிபுரா போன்ற மாநிலங்களை இணைக்கும் வகையில் ரயில்கள் இயங்கும்.

இன்று மாலை 4 மணி முதல் பயணத்திற்கான முன்பதிவு தொடங்கப்படும்

New Delhi:

கொரோனா தொற்று பரவல் சங்கிலியை உடைக்க தேசிய அளவில் முழு முடக்க நடவடிக்கை மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக அனைத்துவிதமான போக்குவரத்துகளும் முற்றிலுமாக முடக்கப்பட்டன. சமீபத்தில் மத்திய அரசு இந்த முழு முடக்க நடவடிக்கையில் சில தளர்வுகளை அறிவித்திருந்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது பயணிகளுக்கான ரயில் சேவையை மத்திய அரசு அனுமதித்துள்ளது. இது குறித்த அறிவிப்பினை ரயில்வே துறை நேற்று வெளியிட்ட தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதில், இன்று மாலை 4 மணி முதல் பயணத்திற்கான முன்பதிவு தொடங்கப்படும் என்றும், இதற்கான பயணி சீட்டுகள் இணையவழி வழியாக மட்டுமே பெற முடியும் எனவும் ரயில்வே துறை குறிப்பிட்டுள்ளது. மேலும், ஐஆர்சிடிசி வழியாக மட்டும்  முன்பதிவு செய்யமுடியும். ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட்டுகள், இதர கவுன்ட்டர்கள் எதுவும் திறந்திருக்காது என்றும் ரயில்வே துறை தனது அறிக்கையில் திட்டவட்டமான அறிவித்துள்ளது.

பயண விவரங்களைப் பொறுத்த அளவில், டெல்லியிலிருந்து புறப்பட்டு அசாம், வங்காளம், பீகார், சத்தீஸ்கர், குஜராத், ஜம்மு, ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா, தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் திரிபுரா போன்ற மாநிலங்களை இணைக்கும் வகையில் ரயில்கள் இயங்கும். 15 சிறப்பு ரயில்கள் இந்த பயணத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளன.

அதேபோல ரயில் நிலையங்களுக்குள் செல்லுபடியாகும் டிகெட்டுகளை வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அனைத்து பயணிகளும் முககவசம் அணிந்திருக்க வேண்டும். பயணத்திற்கு முன்பு அணைத்து பயணிகளுக்கும் தொற்று அறிகுறி குறித்த சோதனை மேற்கொள்ளப்படும். இதில் அறிகுறிகள் இல்லாதவர்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என ரயில்வே துறை எச்சரித்துள்ளது. பயணிகள் தனி மனித இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இயக்கப்படும் ரயில்களில் குளிர்சாதன வசதிகள் கொண்ட ரயில் பெட்டிகள் மட்டுமே இயக்கப்படும். மேலும், குறைந்த நிறுத்தங்களை இந்த பயணங்கள் கொண்டிருக்கும். ரயில் கால அட்டவணை தொடர்பான விவரங்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது. 

இந்த ரயில்கள் புது தில்லி நிலையத்திலிருந்து திப்ருகார், அகர்தலா, ஹவுரா, பாட்னா, பிலாஸ்பூர், ராஞ்சி, புவனேஸ்வர், செகந்திராபாத், பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம், மட்கான், மும்பை சென்ட்ரல், அகமதாபாத், ஜம்மு நகரங்களை  இணைக்கும் சிறப்பு ரயில்களாக இயக்கப்படும்.

"2020 மே 12 முதல் பயணிகள் ரயில் சேவையை படிப்படியாக மறுதொடக்கம் செய்ய ரயில்வே திட்டமிட்டுள்ளது, ஆரம்பத்தில் புது தில்லியை இந்தியா முழுவதும் உள்ள முக்கிய ரயில் நிலையங்களுடன் இணைக்கும் 15 ஜோடி சிறப்பு ரயில்களுடன் இந்த சேவை தொடங்கப்படும். இந்த ரயில்களில் முன்பதிவு மே 11 மாலை 4 மணிக்கு தொடங்கும். " என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

பெட்டிகளின் எண்ணிக்கை அடிப்படையில் மேலும் பல சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே துறை யோசித்து வருகிறது. நாடு தழுவிய முழு முடக்க நடவடிக்கை அறிவிக்கப்பட்ட பிறகு கிட்டதட்ட 20,000 க்கும் அதிகமான ரயில் பெட்டிகள் கொரோனா தொற்று நோயாளிகளுக்கான தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக ரயில்வே துறை மாற்றியுள்ளது. மேலும், ஆயிரக்கணக்கான பயணிகளை தங்கள் சொந்த மாநிலங்களுக்கு அழைத்து வர ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மாநிலங்களின் கோரிக்கைக்கு ஏற்றவாறு இந்த சிறப்பு ரயில் இயக்கங்கள் நீட்டிக்கப்படும்.

இதுவரை நான்கு லட்சத்திற்கும் அதிகமான புலம் பெயர் தொழிலாளர்களை தங்கள் சொந்த மாநிலத்திற்கு 366 சிறப்பு ஷ்ராமிக் ரயில்கள் மூலமாக கொண்டு சேர்க்கப்பட்டுள்ளனர். புலம் பெயர் தொழிலாளர்களும் பயணத்திற்கு முன்னதாக பரிசோதிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு பெட்டியிலும் 72 இருக்கைகள் இருந்தாலும் தனி மனித இடைவெளியை கணக்கில் கொண்டு 52 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு ரயிலும் 24 பெட்டிகளை கொண்டிருக்கும்.

முழு முடக்கத்திற்கு முன்னர் சராசரியாக நாள் ஒன்றுக்கு 12 ஆயிரம் ரயில்கள் வீதம் இயக்கப்பட்டுள்ளது. ரூ .28,032.80 கோடி மதிப்பிலான பொருட்கள் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளன. பயணிகள் கட்டணத்தில் இருந்து ரூ .12,844.37 கோடி வருமானம் மூன்றாவது காலாண்டில் ரயில்வே துறை ஈட்டியுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தற்போது ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களில் பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் துவங்க அரசு பல தளர்வுகளை அறிவித்திருந்தது.  விமான சேவைகளை பொறுத்த அளவில் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமான சேவைகள் எப்போது தொடங்கப்படும் என்கிற விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. 

With input from PTI

World

67,69,38,430Cases
62,55,71,965Active
4,44,81,893Recovered
68,84,572Deaths
Coronavirus has spread to 200 countries. The total confirmed cases worldwide are 67,69,38,430 and 68,84,572 have died; 62,55,71,965 are active cases and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 10:54 am.

India

4,50,19,214 475Cases
3,919 -83Active
4,44,81,893 552Recovered
5,33,402 6Deaths
In India, there are 4,50,19,214 confirmed cases including 5,33,402 deaths. The number of active cases is 3,919 and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 8:00 am.

State & District Details

State Cases Active Recovered Deaths
.