This Article is From Nov 06, 2018

சபரிமலை கோயிலுக்குள் பெண் நுழைந்ததாக தகவல்… வலுக்கும் மோதல்!

சென்ற முறை ஏற்பட்ட பதற்றத்தைத் தடுக்க கேரள அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை முன்னெச்சரிக்கையாக அமல்படுத்தியுள்ளது.

சபரிமலை கோயிலுக்குள் பெண் நுழைந்ததாக தகவல்… வலுக்கும் மோதல்!

சனிக்கிழமை முதல், சபரிமலை கோயிலைச் சுற்றி, 144 தடை உத்தரவு அமலில் இருக்கிறது

Sabarimala, Kerala:

சபரிமலையில் இருக்கும் ஐயப்பன் கோயில் நேற்று மாலை மீண்டும் திறக்கப்பட்டது. நேற்று மாலை 5 மணி முதல் இன்று இரவு 10.30 வரை சிறப்பு பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். இந்நிலையில் இன்று காலை இள வயது பெண் ஒருவர் சபரிமலை கோயிலுக்குள் நுழைந்ததாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து அங்கு சலசலப்பு உருவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.  

இள வயது பெண் ஒருவர் ஐயப்பன் கோயிலுக்குள் நுழைந்ததாக இன்று சபரிமலையில் குவிந்திருந்த பக்தர்களுக்கு மத்தியில் தகவல் பரவியது. இதையடுத்து ஏராளமான வலதுசாரி போராட்டக்காரர்கள், சன்னிதானத்தில் குவிந்தனர். 

இந்த விவகாரம் குறித்து போலீஸ் விசாரித்தது. அதில், கோயிலுக்குள் தரிசனம் செய்ய வந்த பெண்ணுக்கு 52 வயது என்பது தெரியவந்துள்ளது. அவர் தன் மகனுடன் சபரிமலைக்கு வந்துள்ளார். அந்தப் பெண்ணும், அவரது மகனும் தற்போது காவல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

சென்ற முறை ஏற்பட்ட பதற்றத்தைத் தடுக்க கேரள அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை முன்னெச்சரிக்கையாக அமல்படுத்தியுள்ளது. குறிப்பாக கோயிலுக்கு அருகில் 2,300 பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், 20 பேர் கொண்ட கமாண்டோ குழுவும் சபரிமலையில் இருக்கிறது. உச்ச நீதிமன்றம் சமீபத்தில், சபரிமலை கோயிலுக்குள் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் செல்லக் கூடாது என்றிருந்த தடையை விலக்கியது. அனைத்து வயதுப் பெண்களும் கோயிலுக்குள் சென்று வழிபடலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

சனிக்கிழமை முதல், சபரிமலை கோயிலைச் சுற்றி, 144 தடை உத்தரவு அமலில் இருக்கிறது. பாதுகாப்பு கருதியும், பக்தர்களின் நலன் கருதியும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு, கடந்த மாதம் சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. இதையடுத்து, பல பெண்கள் மற்றும் செயற்பாட்டளர்கள் ஆலயத்துக்குள் நுழைய முயன்றனர். ஆனால், சபரிமலையில் குவிந்திருந்த வலதுசாரி போராட்டக்காரர்களால் அவர்கள் தொடர்ந்து விரட்டியடிக்கப்பட்டனர். இதனால் சென்ற முறை நடை திறக்கப்பட்ட போது ஒரு இள வயது பெண் கூட கோயிலுக்குள் செல்ல முடியவில்லை. 

தமிழகம் மற்றும் ஆந்திராவிலிருந்து ஐயப்ப பக்தர்கள் எருமெலியில் குவிந்துள்ளனர். அவர்கள் நேற்று தரிசனத்துக்காக கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டார்கள். தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் சபரிமலையில் குவிந்து வருகிறது.

.