This Article is From Jun 01, 2018

ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க யாரும் முன்வரவில்லை… மோடிக்கு பின்னடைவு!

ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க அரசாங்கம் சில மாதங்களுக்கு முன்னர் முடிவு செய்து ஏலம் விட்டது

ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க யாரும் முன்வரவில்லை… மோடிக்கு பின்னடைவு!

ஏர் இந்தியா நிறுவனம் மீது அதிக கடன் இருப்பது ஏலம் போகாததற்கு காரணமாகக் கூறப்படுகிறது

ஹைலைட்ஸ்

  • நேற்றுடன் ஏலம் எடுக்கும் தேதி முடிவடைந்தது
  • ஒருவர் கூட ஏலம் எடுக்க முன்வரவில்லை
  • கடன் சுமை தான் இதற்கு காரணம் எனப்படுகிறது
New Delhi:

ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க அரசாங்கம் சில மாதங்களுக்கு முன்னர் முடிவு செய்து ஏலம் விட்டது. ஆனால், ஒருவர் கூட ஏலம் எடுக்க முன்வரவில்லை என்பது அதிர்ச்சி அளித்துள்ளது.

ஏர் இந்தியா நிறுவனத்தின் 76 சதவிகித பங்குகளை வாங்க மோடி தலைமையிலான மத்திய அரசு ஏலம் விட்டது. இதற்கான ஏலம் நேற்று முடிவடைந்துள்ள நிலையில், இதுவரை ஒருவர் கூட ஏர் இந்தியாவை வாங்க முன்வரவில்லை. ஏர் இந்தியா, கடந்த சில காலங்களாக நஷ்டத்தில் இயங்குவதால் அந்த நிறுவனத்தை விற்க மத்திய அரசு முடிவெடுத்தது. ஏர் இந்தியா நிறுவனத்தின் மீது ஏறக்குறைய 5 பில்லியன் டாலர் கடன் உள்ளது. இந்த கடனையும் புதிதாக ஏர் இந்தியாவை வாங்கும் நிறுவனம் சுமக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தான், அது ஏலத்தில் எடுக்கபடவில்லை என்று விவரம் அறிந்த நபர்கள் தகவல் தெரிவிக்கின்றனர். 

எதிர்பார்த்தபடி ஏர் இந்தியா நிறுவனம் ஏலத்துக்கு போகததால், ஏற்கெனவே கடனில் துவண்டு வரும் நிறுவனத்தை தொடர்ந்து நடத்துவது அரசுக்கு சிக்கல் ஆகியுள்ளது. இது தன்னை மிகப் பெரிய பொருளாதார சீர்திருத்தவாதியாக சொல்லிக் கொள்ளும் மோடிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக அவரின் அரசு, பொதுத் துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்து தீவிரமாக செய்லபட்டு வரும் நிலையில், இந்த விஷயம் கவனம் பெறுகிறது. 

.