This Article is From Feb 23, 2020

கட்சியில் சேருமாறு பிரசாந்த் கிஷோருக்கு அழைப்பு விடுக்கும் ஆம் ஆத்மி மூத்த தலைவர்!!

பிரபல தேர்தல் பிரசார திட்ட வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், ஐக்கிய ஜனதா தள கட்சியின் தேசிய துணைத் தலைவர் பொறுப்பிலிருந்தார். குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக அவருக்கும், கட்சித் தலைவர் நிதிஷ்குமாருக்கும் இடையே மோதல் வெடித்ததால் பிரசாந்த் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

கட்சியில் சேருமாறு பிரசாந்த் கிஷோருக்கு அழைப்பு விடுக்கும் ஆம் ஆத்மி மூத்த தலைவர்!!

டெல்லி அரசின் மொஹல்லா மருத்துவமனை திட்டத்தை மற்ற மாநிலங்கள் நிறைவேற்றி வருவதாக சஞ்சய் சிங் கூறியுள்ளார்.

Mumbai (Maharashtra):

'பிரசாந்த் கிஷோர் விரும்பினால் அவர் ஆம் ஆத்மி கட்சியில் தன்னை இணைத்துக் கொள்ளலாம். இதில் எங்களுக்கு எந்த கருத்து வேறுபாடும் கிடையாது' என்று ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங் கூறியுள்ளார். 

பிரபல தேர்தல் பிரசார திட்ட வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், ஐக்கிய ஜனதா தள கட்சியின் தேசிய துணைத் தலைவர் பொறுப்பிலிருந்தார். குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக அவருக்கும், கட்சித் தலைவர் நிதிஷ்குமாருக்கும் இடையே மோதல் வெடித்ததால் பிரசாந்த் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

கடந்த செவ்வாயன்று பேட்டியளித்த கிஷோர், கொள்கை ரீதியாக முரண்பாடு ஏற்பட்டதால் தனக்கும் நிதிஷ்குமாருக்கும் இடையே மோதல் வெடித்தது என்று கூறினார்.

அவர் அளித்த பேட்டியில், 'மக்களவை தேர்தல் முடிந்ததிலிருந்தே எனக்கும் நிதிஷ்குமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படத் தொடங்கியது. முதலில் கொள்கை ரீதியாக பிரச்சினை ஏற்பட்டது. இரண்டாவதாக சில விஷயங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எப்படி ஒரே நேரத்தில் மகாத்மா காந்திக்கும், கோட்சேவுக்கும் நிதிஷ் ஆதரவு அளிப்பார் என்று கேட்டேன். ஒரு ட்சி இப்படி இரட்டை நிலைப்பாட்டில் இருக்கக் கூடாது.' என்று கூறினார். 

இதற்கிடையே டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மியின் தேர்தல் பிரசார ஆலோசகராகக் கடந்த டிசம்பர் மாதத்தின்போது பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டார். இந்த தேர்தலில் ஆம் ஆத்மி மாபெரும் வெற்றியைப் பெற்று மீண்டும் ஆட்சியில் அமர்ந்தது. 

இந்த நிலையில் டெல்லி அரசின் செயல்பாடுகள் குறித்து ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது-

பிரசாந்த கிஷோர் விரும்பினால் ஆம் ஆத்மியில் சேர்ந்து கொள்ளலாம். இதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது. கட்சியில் சேர்வது குறித்து பிரசாந்த்தான் முடிவு எடுக்க வேண்டும்.

அமெரிக்க அதிபரின் மனைவி மெலானியா ட்ரம்ப்பு டெல்லியில் உள்ள அரசுப் பள்ளிக்கு வருகிறார். டெல்லி அரசின் செயல்பாடுகள் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கவனிக்கப்படுகிறது. மெலானியா டெல்லி அரசுப்பள்ளிக்கு வருவதை நாங்கள் கவுரவமாக எண்ணுகிறோம். 

டெல்லி அரசின் மொஹல்லா மருத்துவமனை திட்டத்தை மற்ற மாநிலங்கள் பல ஏற்றுக்கொண்டு செயல்படுத்தவுள்ளன. எங்களது கல்வித் திட்டத்தை மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் அரசுகள் பாராட்டியுள்ளன. இதேமுறையை தங்களது மாநிலங்களில் செயல்படுத்தவும் அவை விருப்பம் தெரிவித்திருக்கின்றன. 

.