This Article is From Jul 23, 2018

கனடாவில் மர்ம நபர் துப்பாக்கிசூடு; 9 பேர் காயம்!

கனடாவின் டொரான்டோவில் இருக்கும் ஒரு உணவகத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிசூட்டில், 9 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது

கனடாவில் மர்ம நபர் துப்பாக்கிசூடு; 9 பேர் காயம்!

ஹைலைட்ஸ்

  • துப்பாக்கிசூடு நடத்தியவரும் இறந்துவிட்டதாக தகவல்
  • க்ரீக்டவுனில் உள்ள உணவகத்துக்கு வெளியே இந்த சம்பவம் நடந்துள்ளது
  • ஒரு இளம் பெண்ணும் இந்த சம்பவத்தால் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
Toronto:

கனடாவின் டொரான்டோவில் இருக்கும் ஒரு உணவகத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிசூட்டில், 9 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. 

டொரான்டோவின் க்ரீக்டவுன் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு உள்ள உணவகத்தில் பிறந்தநாள் விழா ஒன்று கொண்டாடப்பட்டு வந்துள்ளது. அப்போது, திடீரென்று மர்ம நபர் சரமாரியாக துப்பாக்கிசூடு நடத்தியுள்ளார். இதுவரை 9 பேருக்கு குண்டடி பட்டுள்ளதாக முதற்கட்டத் தகவல் தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிசூடு நடத்திய மர்ம நபர், தன்னையும் சுட்டுக் கொண்டு இறந்துவிட்டதாகவும் அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. சம்பவத்தை நேரில் பார்த்தவர்களை, துப்பாக்கிசூடு சம்பவம் குறித்து தெரிவிக்குமாறு போலீஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 
 

 

டொரான்டோ போலீஸ் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், ‘9 பேருக்கு இந்த சம்பவத்தால், காயம் ஏற்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. இதில் ஓர் இளம் பெண்ணும் அடங்குவார். துப்பாக்கிசூடு நடத்தியவரும் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறந்துவிட்டார்’ என்று பதிவிட்டுள்ளது. காயமடைந்தவர்கள் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
 

.