This Article is From Nov 07, 2019

'50:50' அடம்பிடிக்கும் சிவசேனா; ஆளுநரை சந்திக்கும் பாஜக! - குடியரசுத் தலைவர் ஆட்சி?

Maharashtra government: ஆட்சி அமைக்க ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை தொடர்ந்து, முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் நேற்றைய தினம் ஆறு சிவசேனா அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில், ஆட்சி அமைப்பதற்கான அதிகாரப்பகிர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆறு சிவசேனா அமைச்சர்களுடன் தேவேந்திர ஃபட்நாவிஸ் ஆலோசனை நடத்தினார்.

Mumbai:

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதற்கான இறுதி கெடு முடிவடைய உள்ள நிலையில், நேற்றைய தினம் சிவசேனாவுடன் மீண்டும் கூட்டணி ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்திய பாஜக தொடர்ந்து, இன்று ஆளுநரையும் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கூட்டணி கட்சி உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மூத்த பாஜக தலைவர் சுதிர் முங்கன்திவார், காத்திருங்கள் "நல்ல செய்தி எப்போது வேண்டுமானாலும் வரலாம்". எவ்வளவு முயற்சித்தாலும், தண்ணீரை பிரிக்க முடியாது. யார் என்ன கூறினாலும், நிச்சயம் கூட்டணி ஆட்சி அமையும் என்று அவர் கூறினார்.

மகாராஷ்டிராவில் கடந்த அக்.24ம் தேதி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், ஆட்சி அமைவதில் தொடர்ந்து இழுபறி நிலை நீடித்து வந்தது. இதனிடையே, ஆட்சி அமைக்க ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை தொடர்ந்து, முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் நேற்றைய தினம் ஆறு சிவசேனா அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில், ஆட்சி அமைப்பதற்கான அதிகாரப்பகிர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதில், 50:50 அதிகாரப்பகிர்வு, 2.5 வருடத்துக்கு சுழற்சி முறையில் சிவசேனாவுக்கு முதல்வர் பதவி, அமைச்சரவையில் சரிபாதி இடங்கள் உள்ளிட்ட அம்சங்களை முன்வைத்தே மீண்டும் சிவசேனா வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து, பாஜக ஆளுநரை சந்திப்பது தொடர்பாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறும்போது, உத்தவ் தாக்கரே என்ன கூறுகிறாரோ அதையே செய்வோம் என்றார். 

q3qe5ouo

மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணி அரசு அமைவதற்கான சாத்தியம் மட்டுமே உள்ளது - சரத்பவார். 

முன்னதாக நேற்றைய தினம் சஞ்சய் ராவத், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சரத்பவார், மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணி அரசு அமைவதற்கான சாத்தியம் மட்டுமே உள்ளது. வேறு வழியே இல்லை. அதனால், மாநிலத்தை அரசியலமைப்பு நெருக்கடிக்கு உட்படுத்தாமல், இரு கட்சிகளும் ஆட்சி அமைக்க முன்வர வேண்டும். பாஜக - சிவசேனா கூட்டணி கடந்த 25 வருடங்களாக இருந்து வருகிறது. அதனால், அவர்கள் புதிய ஆட்சியை அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். 

சஞ்சய் ராவத், தங்களுக்கு 170 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதாக தெரிவித்துள்ளார். மொத்தமுள்ள 288 உறுப்புனர்களில், 145 பெரும்பான்மைக்கு தேவையென்ற நிலையில், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர்களை சேர்க்காமல் எப்படி அது சாத்தியமாகும்? நானும், சஞ்சய் ராவத்திடம் 170 பேர் ஆதரவு எப்படி கிடைத்தது என கேட்க வேண்டும் என்றார். 

காங்கிரஸ் தலைவர் சோனியாவையும், சிவசேனா தரப்பில் சஞ்சய் ராவத்தையும் சரத்பவார் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. சிவசேனாவை வைத்து பாஜகவை ஆட்சி அமைக்கவிடாமல் தடுக்கும் செயலாக தெரிந்தது. எனினும், சோனியா காந்தியுடன் திங்களன்று நடந்த சந்திப்பை தொடர்ந்து, சிவசேனாவுக்கு ஆதரவு தெரிவிக்க காங்கிரஸ் திட்டவட்டமாக மறுத்துவிட்டதாக தெரிகிறது. 

மகாராஷ்டிர தேர்தலில் பாஜக - சிவசேனா கூட்டணி, மொத்தம் இருக்கும் 288 தொகுதிகளில் 161-ஐக் கைப்பற்றின. பாஜக, 105 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சிவசேனா, 56 இடங்களில் வெற்றியடைந்தது. தேசியவாத காங்கிரஸ் தேர்தலில், 54 இடங்களையும், காங்கிரஸ், 44 இடங்களையும் வென்றன. 

அதிகாரத்தில் சரிபாதி தர வேண்டும் என்று கூட்டணி கட்சியான சிவசேனா அடம்பிடித்து வருவதால், மகாராஷ்டிராவில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்குமா அல்லது குடியரசுத்தலைவர் ஆட்சி அமையுமா என பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 

.