This Article is From Sep 21, 2020

மும்பை அருகே கட்டிடம் இடிந்து விபத்து! 10 பேர் உயிரிழப்பு!!

விபத்திற்குள்ளான கட்டிடத்தில் 20 குடும்பங்கள் வசித்து வந்துள்ளன. இந்த கட்டிடம் 40 ஆண்டுகள் பழமையானது என்பது குறிப்பிடத்தக்கது.

New Delhi:

மும்பை அருகே ஏற்பட்ட கட்டிட விபத்தில் 10பேர் உயிரிழந்துள்ளனர், 25 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.

மும்பை அருகே உள்ள பிவாண்டி பகுதியின் படேல் குடியிருப்பு பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்று இன்று அதிகாலை இடிந்து விழுந்து விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

இடிபாடுகளில் சிக்கியிருந்த 20 பேரை அப்பகுதி மக்கள் மீட்டுள்ளனர். தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்த பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் ஒரு குழந்தை உட்பட 11 பேரை மீட்டுள்ளனர்.

விபத்திற்குள்ளான கட்டிடத்தில் 20 குடும்பங்கள் வசித்து வந்துள்ளன. இந்த கட்டிடம் 40 ஆண்டுகள் பழமையானது என்பது குறிப்பிடத்தக்கது.

.