This Article is From Feb 16, 2019

தொடங்கப்பட்ட ஒரே நாளில் செயலிழந்து நின்றது நாட்டின் அதிவேக ரயில்

இந்தியாவின் அதிவேக ரயிலாக வந்தே பாரத் எக்ஸ்ப்ரஸ் கருதப்படுகிறது. இதனை ட்ரெய்ன் 18 என்றும் அழைக்கிறார்கள். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 180 கிலோ மீட்டர்.

வந்தே பாரத் எக்ஸ்ப்ரஸை பிரதமர் மோடி நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

New Delhi:

இந்தியாவின் அதிகவேக ரயிலான வந்தே பாரத் எக்ஸ்ப்ரஸ் எஞ்சின் கோளாறு காரணமாக டெல்லிக்கு செல்லும் வழியில் நின்று கொண்டது. பயணிகள் அனைவரும் இருவேறு ரயில்களில் அவர்கள் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்தியாவின் அதிவேக ரயில் என்று சொல்லப்படும் ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்'-ஐ பிரதமர் நரேந்திர மோடி நேற்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். புது டெல்லி ரயில் நிலையத்தில் இந்த துவக்க நிகழ்ச்சி நடந்தது.

நேற்று வெற்றிகரமாக சென்ற வந்தே பாரத் எக்ஸ்ப்ரஸ் இன்று எஞ்ஜின் கோளாறு காரணமாக பாதியிலேயே படுத்துக் கொண்டது. வாரணாசியில் இருந்து டெல்லிக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, டெல்லியில் இருந்து சரியாக 150 கிலோ மீட்டர் தூரத்தில் ரயில் எஞ்ஜினில் கோளாறு ஏற்பட்டது.

இதையடுத்து பயணிகள் 2 ரயில்கள் மூலம் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கோளாறு சரி செய்யப்பட்டு நாளை முதல் வழக்கமான சேவையை வந்தே பாரத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியிலிருந்து வாரணாசிக்கு, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், 9 மணி நேரம் 45 நமிடத்தில் சென்றடையும். நடுவே கான்பூர் மற்றும் அலகாபாத்தில் 40 நிமிடங்களுக்கு இந்த ரயில் நிற்கும். இந்த ரயிலில் 16 குளிர்சாதனப் பெட்டிகள் இருக்கின்றன. 1,128 பேர் இதில் பயணிக்க முடியும்.

ஆன்லைன் மூலமாக மட்டுமே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு டிக்கெட் புக் செய்ய முடியும். சாதாரண ரயில் பெட்டி டிக்கெட்டின் விலை, 1760 ரூபாய். உயர் ரக டிக்கெட்டின் விலை 3,310 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் படிக்க - "காரை ரோட்டில் ஓட்டச் சொன்னால், தண்ணீரில் ஓட்டியவர்..!"

.