குடும்ப உறுப்பினர்கள் பெண் ரீனாபாய்க்கு அந்த பூசாரி வினோத் மஹாராஜ்க்கும் திருமணத்திற்கு முன் உறவு உள்ளதாக நம்புகின்றனர்.
Vidisha, Madhya Pradesh: திருமணம் முடிந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு, மத்திய பிரதேசத்தில் பெண் ஒருவர் தன் திருமணத்தை நடத்தி வைத்த பூசாரியுடன் ஓடி விட்டதாக கூறப்படுகிறது.
விதேஷா மாவட்டத்தில் உள்ள டோரி பாக்ரூட் கிராமத்தில் ரீனா பாய் (21) மே 7 அன்று திருமணம் செய்து கொண்டார். பூசாரி வினோத் மஹாராஜ் சடங்களை நடத்தி வைத்துள்ளார்.
மே 23 முதல் ரீனாபாய் காணாமல் போய்விட்டார். போகும்போது பணம் நகை அனைத்தும் எடுத்துச் சென்று விட்டதாக பெண்ணின் உறவினர்கள் தெரிவித்தனர். காவல்துறையில் பெண் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.
குடும்ப உறுப்பினர்கள் பெண் ரீனாபாய்க்கு அந்த பூசாரி வினோத் மஹாராஜ்க்கும் திருமணத்திற்கு முன் உறவு உள்ளதாக நம்புகின்றனர்.