This Article is From Sep 22, 2018

தமிழக அமைச்சர் குறித்து அவதூறான கருத்து; முன்னாள் எம்.எல்.ஏ கைது!

தமிழக மின் துறை அமைச்சர் தங்கமணிக்கு எதிராக, சரஸ்வதி பல அவதூறான செய்திகளை வாட்ஸ்அப் மூலம் பரப்பியதாக கூறப்படுகிறது

தமிழக அமைச்சர் குறித்து அவதூறான கருத்து; முன்னாள் எம்.எல்.ஏ கைது!

முன்னாள் எம்.எல்.ஏ சரஸ்வதி

தமிழக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணிக்கு எதிராக அவதூறான கருத்துகளை வாட்ஸ்அப் மூலம் பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டு முன்னாள் எம்.எல்.ஏ சரஸ்வதி நாமக்கல்லில் கைது செய்யப்பட்டுள்ளார். 

சரஸ்வதி, முன்னர் அதிமுக-வில் இருந்தார். 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவர் திமுக-வில் இணைந்தார். இந்நிலையில், தமிழக மின் துறை அமைச்சர் தங்கமணிக்கு எதிராக, சரஸ்வதி பல அவதூறான செய்திகளை வாட்ஸ்அப் மூலம் பரப்பியதாக கூறப்படுகிறது. இது குறித்து கீரம்பூர் அதிமுக செயலாளர் ராஜா, காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து காவல் துறை சரஸ்வதியிடம் விசாரணை நடத்தியுள்ளது. தொடர்ந்து அவரை கைது செய்துள்ளது. 

சரஸ்வதி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு முன்னாள் எம்.எல்.ஏ இப்படி கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

.