This Article is From Jul 16, 2018

கர்நாடகாவில் குழந்தை கடத்தல்காரர்கள் என்று சந்தேகப்பட்டு தாக்குதல்… ஒருவர் பலி!

கர்நாடகாவின் பிடார் பகுதியில் குழந்தை கடத்தல்காரர்கள் என்று சந்தேகப்பட்டு 3 பேர் மீது உள்ளூர் மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்

Hyderabad:

கர்நாடகாவின் பிடார் பகுதியில் குழந்தை கடத்தல்காரர்கள் என்று சந்தேகப்பட்டு 3 பேர் மீது உள்ளூர் மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்ற இருவருக்கு பலத்தக் காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இது தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ஐதரபாத்திலிருந்து பிடார் பகுதிக்கு பாதிக்கப்பட்ட மூவரும் பிக்னிக் சென்றுள்ளனர். அப்போது, மூவரில் ஒருவர் உள்ளூர் குழந்தைகளுக்கு சாக்லேட் வழங்கியுள்ளார். இதை வைத்து, அவர்கள் குழந்தை கடத்தல்காரர்கள் என்று சந்தேகப்பட்டு உள்ளூர் மக்கள் தாக்க ஆரம்பித்துள்ளனர். காரில் தப்பியோட முயன்ற அவர்கள், நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்தனர். அப்போது, உள்ளூர் மக்கள் அவர்களை வெளியில் இழுத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால், ஒருவர் உயிரிழந்தார். இருவருக்கு பலத்தக் காயம் ஏற்பட்டுள்ளது. 

சம்பவம் குறித்து எஃப்.ஐ.ஆர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள 10 விஷயங்கள்

இறந்த நபரின் பெயர் முகமது அசாம். அவருக்கு 32 வயதாகிறது. ஐதராபாத்தில் சாப்ட்வேர் நிறுவனத்தில் அவர் பணி புரிந்து வருகிறார். காயமடைந்த இருவரில் ஒருவர் அசாமின் நண்பர். அவரின் பெயர் முகமது சல்மான். அவர் கத்தாரைச் சேர்ந்தவர். 

எஃப்.ஐ.ஆர்-ல், சம்பவ இடத்துக்கு போலீஸ் சென்ற போது, அவர்களையும் உள்ளூர் மக்கள் தாக்கினர். போலீஸார், தங்களது கடமையைச் செய்வதிலிருந்து அவர்கள் தடுத்தனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் 150 முதல் 200 பேர் ஈடுபட்டனர்.

தாக்குதலுக்கு உள்ளான 3 பேர், முகமது சல்மான், முகமது அசாம், முகமது சலாம் ஆவர். மூவரும் சமீபத்தில் தான் கத்தாரிலிருந்து வந்திருந்தனர். அவர்களைத் தாக்கும் போது மக்கள், ‘கத்தாரிலிருந்து வந்திருக்கின்றனர். அவர்களை கொல்லுங்கள்’ என்று கோஷமிட்டனர்.

மூவரையும் சம்பவ இடத்திலிருந்து மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர் போலீஸ். ஆனால், வழியிலேயே அசாம் இறந்துவிட்டார். 

ஹண்டிக்ரே கிராமத்தில் இருக்கும் ஒரு உறவினர் வீட்டுக்கு அவர்கள் சென்றுள்ளனர். அப்போது தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

’15 முதல் 20 பேர் வந்து எங்கள் காரில் இருக்கும் டயரின் காற்றை இறக்கிவிட்டனர். ஏன் அப்படி செய்கிறீர்கள் என்று கேட்டால், ‘நீங்கள் குழந்தை கடத்தல்காரர்கள்’ என்று சொல்லி கல் மற்றும் கம்பியைக் கொண்டு தாக்கத் தொடங்கினர்’ என்று பாதிக்கப்பட்ட நபர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

அதிக பேர் தாக்க வந்தவுடன், காரை வேகமாக செலுத்தத் தொடங்கினர் பாதிக்கப்பட்டவர்கள். ஆனால், ஒரு பாலத்திற்கு அடியில் கார் நிலை தடுமாறி விழுந்துவிட்டது. 

இதுவரை 32 பேர் இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். மனோஜ் பாட்டில் என்பவர் தான் இந்த சம்பவத்தை முன்னின்று நடத்தியுள்ளார்.

.