This Article is From Jun 29, 2020

’மூச்சு விட முடியவில்லை’: கொரோனா பாதித்தவர் இறப்பதற்கு முன்பு தந்தைக்கு அனுப்பிய வீடியோ!

Hyderabad: நோயாளிகள் எதிர்கொள்ளும் சிரமத்தை குறிப்பிடும் வகையில், மக்கள் இந்த வீடியோவை பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோப் பதிவு அந்த இளைஞர் உயிரிழப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு எடுக்கப்பட்டுள்ளது. 

’மூச்சு விட முடியவில்லை’: கொரோனா பாதித்தவர் இறப்பதற்கு முன்பு தந்தைக்கு அனுப்பிய வீடியோ!

Hyderabad:

ஐதராபாத்தில் 34 வயது இளைஞர் ஒருவர் தான் உயிரிழப்பதற்கு முன்பு அரசு மருத்துவமனையில் இருந்து, தனது தந்தைக்கு அனுப்பியுள்ள வீடியோ தகவலால் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக உயிரிழந்த இளைஞரின் தந்தை கூறும்போது, 10க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து, இறுதியாக ஐதராபாத் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். 

சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வரும் அந்த வீடியோவில், ”என்னால் மூச்சு விட முடியவில்லை.. நான் கெஞ்சி கேட்டும் கடந்த 3 மணி நேரமாக எனக்கு ஆக்ஸிஜன் வழங்கவில்லை. அப்பா, என்னால் மூச்சு விட முடியவில்லை, என் இதயம் நின்றது போல் இருக்கிறது.. விடைபெறுகிறேன் அப்பா.. அனைவரிடமிருந்தும் விடைபெறுகிறேன் அப்பா,” என்று அவர் அதில் தெரிவித்துள்ளார். 

நோயாளிகள் எதிர்கொள்ளும் சிரமத்தை குறிப்பிடும் வகையில், மக்கள் இந்த வீடியோவை பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோப் பதிவு அந்த இளைஞர் உயிரிழப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு எடுக்கப்பட்டுள்ளது. 

எனது மகன் உதவிக்காக அழைத்துள்ளான், எனினும் யாரும் அவனுக்கு உதவவில்லை. அவனது இறுதி சடங்குகளை முடித்து வீடு திரும்பிய பின்னர் தான் இந்த வீடியோவை பார்க்கிறேன். எனது மகன் விடைபெறுகிறேன் அப்பா என்று கூறுகிறான் என்று அந்த தந்தை கதறுகிறார். எனது மகனுக்கு நடந்தது, யாருக்கும் நடக்கக்கூடாது. எதற்காக எனது மகனுக்கு ஆக்ஸிஜன் மறுக்கப்பட்டது? அவசரமாக தேவைப்படுகிறது என்று சொன்னால், அவர்களிடம் இருந்து ஆக்ஸிஜனை எடுத்துச்சென்றுவிடுவார்களா? எனது மகனின் வீடியோப் பதிவை பார்த்து எனது இதயம் நொறுங்கியது..

அந்த இளைஞரின் இறுதிச்சடங்குகளை அவர் உயிரிழந்த அன்றைய தினமே அந்த குடும்பத்தினர் மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து, மறுநாள் காலையில், அவரது தந்தைக்கு தனியார் மருத்துவமனையில் இருந்து அழைப்பு வந்துள்ளது. எங்கு அவரது மகனுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது தொடர்பாக அழைத்துள்ளனர். அப்போது, அவரது மகன் கொரோனா வைரஸ் தொற்றால் தான் உயிரிழந்ததாக தகவல் தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து, அந்த குடும்பத்தினருக்கு மேலும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அந்த இளைஞரின் பெற்றோர், மனைவி, சகோதரர், மைத்துனர் என அனைவரும் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, அவர்கள் அனைவரும் தற்போது கவலையில் உள்ளனர். 

எங்களுக்கு சோதனை முடிவுகள் தாமதமாக தான் தெரிவிக்கப்பட்டது. அதற்கு முன்பே மருத்துவமனை தரப்பு எங்களுக்கு உடலை வழங்கியது. நாங்கள் அனைவரும் அதனுடன் நெருங்கி இருந்துள்ளோம். எனினும், எங்களை யாரும் சோதனை செய்ய முன்வரவில்லை. எனக்கு இரண்டு பேரக்குழந்தைகள் உள்ளனர். எனது மகனின் 12 வயது மகளும், 9 வயது மகனும், அவர்களுக்கு இன்னும் அவர்களது தந்தை உயிரிழந்தது கூட தெரியாது. நான் தற்போது என்ன செய்வேன் என்று அவர் கண்ணீர் சிந்துகிறார்.

.