படைப்பாளர்களும் தொழில்முனைவோர்களும் ஒன்றிணைந்து அவர்கள் அனைவரும் ஆக்கப்பூர்வமாக பணி செய்வதற்காக தொடங்கப்பட்ட ஒரு இடமே இந்த 'F215'. ஒரு சூழலைக் காரணமாக கொண்டு யாரும் தங்கள் கனவுகளை, எண்ணங்களை செய்துமுடிக்க முடியாமல் போய்விடக்கூடாது என்ற நோக்கத்திலேயே இந்த பணியிடம் துவங்கப்பட்டது. இந்த பணியிடம் ஒரு தனித்துவமான அதிர்வை வெளிப்படுத்துகிறது, இது தொழில்முறை மற்றும் ஆக்கபூர்வமான வேடிக்கைகளுக்கு இடையிலான ஒரு சமநிலையை கொண்டதாக இருக்கிறது. தடையற்ற மின்சாரம் மற்றும் வைஃபை, தனியார் அலுவலகங்கள் மற்றும் சமூக தொடர்புகளுக்கான பொதுவான பகுதிகள், மற்றும் சந்திப்பு அறைகள் போன்ற பல வசதிகளை, இந்த F215 கொண்டுள்ளது. ஒவ்வொரு அலுவலகத் தேவையான வசதி, வேலை இடம் ஆகியவற்றை F215 வழங்கும் என நம்பப்படுகிறது.
‘படிப்பு, வேலை, வேலைக்குச் செல்வது, பணம் சம்பாதிப்பது' இதுதான் வாழ்க்கை முறை என பல ஆண்டுகளாக பெரும்பாலான மக்களுக்கு கற்பிக்கப்படுகிறது. ஒருவர் தான் செய்யும் பணியை விரும்பித்தான் செய்கிறார்களா, அவர்கள் பணிபுரியும் இடத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா?' போன்ற கேள்விகளுக்கு பதிலாகவே இந்த F215 நிறுவப்பட்டதாக, அதன் நிறுவனர் தீப்தி ரெட்டி (Deepti Reddy) கூறுகிறார்.
F215 என்பது சென்னையில் அமைந்துள்ள ஒரு பணியிடம். இந்த இடத்தில் பல விதமான உட்கட்டமைப்புகளுடன், அலுவலகங்கள், சந்திப்பு அறைகள், சமூக தொடர்புகளுக்கான பொதுவான பகுதிகள் என பல பகுதிகள் உள்ளன. இந்த இடத்தில் எந்த பகுதி வேண்டுமானாலும் அதற்கான வாடகையை அளித்து அந்த இடத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.