This Article is From Apr 25, 2020

கொரோனாவுக்காக உருவாக்கப்பட்ட PM CARES Fund… அரசு ஆடிட்டர் தணிக்கை செய்யமாட்டார் எனத் தகவல்!

கடந்த மார்ச் 28 ஆம் தேதி, மத்திய அமைச்சரவை PM CARES டிரஸ்டை உருவாக்கியது.

PM CARES நிதி குறித்து தொடர்ந்து பிரசாரம் செய்து வந்தாலும், எதிர்க்கட்சிகள், பேரிடர் காலங்களில் நிதியுதவி செய்வதற்கு ஏதுவாக பிரதமர் தேசிய பேரிடர் நிதி என்கிற PMNRF உள்ளது எனவும்...

ஹைலைட்ஸ்

  • கொரோனா நிதியுதியைப் பெற PM CARES ஃபண்டு உருவாக்கப்பட்டது
  • மார்ச் 28 ஆம் தேதி இந்த ஃபண்டு உருவாக்கப்பட்டது
  • அதன் தலைவராக பிரதமர் நியமிக்கப்பட்டார்
New Delhi:

கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலாக மாறியதைத் தொடர்ந்து மத்திய அரசு, PM CARES ஃபண்டு என்னும் புதிய பேரிடர் நிதிக் கணக்கைத் தொடங்கியது. இந்த கணக்கில் தொடர்ந்து பலரும் நிதியுதவி செலுத்து வரும் நிலையில், அது இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் எனப்படும் சிஏஜி-யால் தணிக்கை செய்யப்படாது என்று NDTV-க்குத் தகவல் வந்துள்ளது. 

இது குறித்து சிஏஜி அலுவலகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், நம்மிடம் பேசுகையில், “இந்த PM CARES ஃபண்டில் தனி நபர் மற்றும் நிறுவனங்கள் நிதியுதவி செய்வதனால், அதை தணிக்கை செய்யும் உரிமை எங்களுக்கு இல்லை,” என்று கூறியுள்ளார். 

கடந்த மார்ச் 28 ஆம் தேதி, மத்திய அமைச்சரவை PM CARES டிரஸ்டை உருவாக்கியது. அதன் தலைவராகப் பிரதமர் நரேந்திர மோடி நியமிக்கப்பட்டார். மூத்த அமைச்சர்கள் அதன் அறக்கட்டளையாவார்களாக நியமனம் செய்யப்பட்டனர். 

“அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் எங்களிடம் தணிக்கை செய்யச் சொல்லி கோரிக்கை வைக்காத நிலையில், எங்களால் அதை தணிக்கை செய்ய முடியாது,” என்று தகவல் கூறுகிறார் அந்த சிஏஜி அதிகாரி. 

அதே நேரத்தில் மத்திய அரசு தரப்பு, PM CARES நிதி, ‘அறக்கட்டளை பிரதிநிகளால் நியமிக்கப்படும் தனியார் ஆடிட்டர்கள் மூலம் தணிக்கை செய்யப்படும்' எனத் தெரிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து பிரதமர் மோடி உள்ளிட்ட, மத்திய அரசைச் சேர்ந்த பலர், PM CARES ஃபண்டுக்கு நிதியுதவி செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைத்து வருகிறார்கள். 

PM CARES நிதி குறித்து தொடர்ந்து பிரசாரம் செய்து வந்தாலும், எதிர்க்கட்சிகள், பேரிடர் காலங்களில் நிதியுதவி செய்வதற்கு ஏதுவாக பிரதமர் தேசிய பேரிடர் நிதி என்கிற PMNRF உள்ளது எனவும், எதற்குப் புதிய பெயரில் ஒரு கணக்குத் தொடங்கப்படுகிறது எனவும் கேள்வி எழுப்பி வருகின்றன. 

அதேபோல மாநில பேரிடர் நிதியை பொருட்படுத்தாமல் PM CARES ஃபண்டுக்கு நிதியுதவி செய்வது பற்றியும் பல மாநில அரசுகள், மத்திய அரசுக்குக் கேள்வி எழுப்பியுள்ளன. 

PM CARES நிதி, தனி நபர்கள், பெரு நிறுவனங்கள், முக்கியப் புள்ளிகளிடமிருந்து வட்டியில்லா நிதியைப் பெறுகின்றன. பலரும் பல கோடி ரூபாய்க்கு PM CARES ஃபண்டில் தங்கள் நிதியுதிவியைச் செலுத்தியுள்ளார்கள். 

PM CARES ஃபண்டு, அரசு ஆடிட்டரால் தணிக்கை செய்யப்படாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், பிரதமர் தேசிய பேரிடர் நிதியான PMNRF-ம் சிஏஜி-யால் தணிக்கை செய்யப்படுவதில்லை என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது. அதே நேரத்தில் மத்திய அரசிடம், PMNRF குறித்து சிஏஜி-யால் கேள்வியெழுப்ப முடியும். 


 

World

67,69,38,430Cases
62,55,71,965Active
4,44,81,893Recovered
68,84,572Deaths
Coronavirus has spread to 200 countries. The total confirmed cases worldwide are 67,69,38,430 and 68,84,572 have died; 62,55,71,965 are active cases and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 10:54 am.

India

4,50,19,214 475Cases
3,919 -83Active
4,44,81,893 552Recovered
5,33,402 6Deaths
In India, there are 4,50,19,214 confirmed cases including 5,33,402 deaths. The number of active cases is 3,919 and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 8:00 am.

State & District Details

State Cases Active Recovered Deaths
.