This Article is From Aug 14, 2020

சென்னையில் கொரோனா தொற்று: அதிகரிக்கும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை - மண்டலவாரி விவரம்!

இதுவரை சென்னையில் கொரோனா தொற்றால் 2,384 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள்.

சென்னையில் கொரோனா தொற்று: அதிகரிக்கும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை - மண்டலவாரி விவரம்!

சென்னையில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் 1,070 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • சென்னையில் அம்பத்தூர் மண்டலத்தில் அதிக கொரோனா ஆக்டிவ் கேஸ் உள்ளது
  • மணலி மண்டலத்தில் மிகக் குறைவான கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
  • சென்னையில் கொரோனவால் பாதிக்கப்பட்ட 88% பேர் மீண்டு வந்துள்ளனர்

தமிழகத்தில் நேற்று 5,835 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 989 பேர். ஒட்டுமொத்த அளவில் 3,20,355 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 5,146 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 2,61,459 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 53,499 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 119 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 5,397 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

சென்னையில் மண்டலம் வாரியாக உள்ள ஆக்டிவ் கேஸ் விவரம் (14.08.2020) வருமாறு:

திருவொற்றியூர் - 283

மணலி - 107

மாதவரம் - 479

தண்டையார்பேட்டை - 543

ராயபுரம் - 787

திரு.வி.க நகர் - 638

அம்பத்தூர் - 1,563

அண்ணா நகர் - 1,151

தேனாம்பேட்டை - 593

கோடம்பாக்கம் - 1,243

வளசரவாக்கம் - 867

ஆலந்தூர் - 568

 அடையாறு - 1,077

பெருங்குடி - 440

சோழிங்கநல்லூர் - 435

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 94

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 99,806 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். இது 88 சதவீத மீட்பு விகிம் ஆகும். 2,384 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தற்போது 10,868 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சென்னையில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் 1,070 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையிலேயே அதிகபட்சமாக அம்பத்தூர் மண்டலத்தில் 1,563 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீள சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். அதைத் தொடர்ந்து கோடம்பாக்கம் மண்டலத்திலும் மற்றும் அண்ணா நகர் மண்டலத்திலும் முறையே 1,243 மற்றும் 1,151 பேருக்கு கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மணலி மண்டலத்தில் மிகக் குறைவாக 107 பேர் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.

.