This Article is From Oct 18, 2018

டெல்லி ஓட்டலில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய முன்னாள் எம்.பி மகன் சரண்!

டெல்லியில் இருக்கும் ஓட்டல் ஒன்றில் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி-யின் மகன் ஆஷிஷ் பாண்டே, துப்பாக்கியைக் காட்டி மிரட்டினார்

டெல்லி ஓட்டலில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய முன்னாள் எம்.பி மகன் சரண்!

இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது

New Delhi:

சில நாட்களுக்கு முன்னர் டெல்லியில் இருக்கும் ஓட்டல் ஒன்றில் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி-யின் மகன் ஆஷிஷ் பாண்டே, துப்பாக்கியைக் காட்டி மிரட்டினார். இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, பாண்டே மீது டெல்லி போலீஸ் வழக்கு தொடர்ந்தது. வழக்கு போடப்பட்டதிலிருந்து அவர் தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில் இன்று டெல்லியில் இருக்கும் நீதிமன்றத்தில் பாண்டே சரண்டைந்துள்ளார். 

சரணடைந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பாண்டே, ‘நான் ஒரு தீவிரவாதி போல் சித்தரிக்கப்பட்டு இருக்கிறேன். நாட்டில் இருக்கும் காவல் துறையினர் என்னைத் தீவிரமாக தேடி வருகின்றனர். எனக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த சிசிடிவி வீடியோவை நன்றாக பார்த்தால் யார் குற்றவாளி என்பது தெரியும்’ என்று கூறியுள்ளார். 

10 நொடிகள் ஓடும் அந்த வீடியோ பதிவில், பாண்டே, பெண்கள் கழிவறைக்கு உள்ளே நுழைவதற்கு ஒரு பெண் எதிர்ப்புத் தெரிவிக்கிறார். அதற்கு பாண்டே, அந்தப் பெண்ணைத் தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டுகிறார். ஒரு கட்டத்தில் பாண்டேவுடன் வந்திருந்த நண்பர்களும் ஓட்டல் ஊழியர்களும் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்துகின்றனர். இந்த வீடியோ பதிவு அக்டோபர் 14 ஆம் தேதி, ஒரு பார்ட்டியின் போது எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த விவகாரம் குறித்து டெல்லி காவல் துறை, ஆயுதங்கள் தடுப்புச் சட்டத்திற்குக் கீழ் பாண்டே மீது வழக்குத் தொடர்ந்தது.

.