This Article is From Jul 24, 2018

சீர்காழி அருகே அ.தி.மு.க பிரமுகர் வெட்டி கொலை

கொலைக்கான காரணங்கள் இன்னும் கண்டறியப் படவில்லை.

சீர்காழி அருகே அ.தி.மு.க பிரமுகர் வெட்டி கொலை
Nagapattinam:

நாகப்பட்டினம்: சீர்காழி அ.தி.மு.க ஒன்றிய மாணவ அணி செயலாளராக இருந்த 42 வயது ரமேஷ் பாபு என்றவரை, மர்ப நபர்கள் தாக்கி கொலை செய்துள்ளனர்.

சீர்காழி அருகே சென்று கொண்டிருந்த ரமேஷ் பாபுவின் கார் மீது மர்ப நபர்கள் நாட்டு வெடி குண்டு வீசியுள்ளனர். அதனால் பதற்றம் அடைந்த அ.தி.மு.க பிரமுகர், வாகனத்தை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ப நபர்கள், ரமேஷ் பாபுவை அரிவாளால் வெட்டி தாக்கியுள்ளனர். இதனால், சம்பவ இடத்திலேயே ரமேஷ் பாபு உயிரிழந்தார் என்று காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

கொலைக்கான காரணங்கள் இன்னும் கண்டறியப் படவில்லை,  இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த சீர்காழி காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

.