This Article is From Jun 10, 2019

மேற்குவங்க வன்முறை: முழு அடைப்பு போராட்டத்திற்கு பாஜக அழைப்பு.!

கொல்கத்தாவில் இருந்து 70 கி.மீ தொலைவில் உள்ள நேஜாத் பகுதியில், நேற்று முன்தினம் மாலை ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில், 3 பாஜக ஆதரவாளர்கள் உயிரிழந்துள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

மேற்குவங்க வன்முறை: முழு அடைப்பு போராட்டத்திற்கு பாஜக அழைப்பு.!

வன்முறையில் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

Kolkata:

திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சியினர் இடையே ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து, வன்முறையில் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய பாஜக அனுமதி கோரியது. இந்த இறுதி சடங்குகளுக்கான பணிகள் நடந்து வந்த நிலையில், திடீரென முடிவை மாற்றிய பாஜக, தொடர்ந்து இன்ற பந்த் அறிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் உடல்களை கொல்கத்தா எடுத்துச்சென்று அங்கு மாபெரும் இறுதி சடங்கு நிகழ்ச்சிகளை நடந்தி மரியாதை செலுத்த பாஜக திட்டமிட்டது. எனினும், இதற்கு அனுமதி மறுத்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை நெடுஞ்சாலை அருகிலே தகனம் செய்யும் படி கேட்டுக்கொண்டனர்.

இதைத்தொர்ந்து, உள்ளுரில் போராட்டம் நடத்தும் என்றும், மாநிலம் முழுவதும் இன்று 'பந்த்' போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. மேலும், 12ஆம் தேதி தலைமை காவல் நிலையம் நோக்கி பேரணி செல்லவும் அழைப்பு விடுத்துள்ளது.

அண்மையில் நிறைவடைந்த மக்களவைத் தேர்தலில், பாஜக 18 தொகுதிகளை கைப்பற்றிய நிலையில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களிடையே ஆங்காங்கே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் பரிஷத் மக்களவைத் தொகுதியில் நேற்று முன்தினம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய வெற்றி பேரணியின் போது கலவரம் மூண்டது. பாஜக கொடி கம்பங்கள் அகற்றப்பட்ட நிலையில், பல கடைகள், வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன.

இந்த வன்முறையின்போது பாஜகவைச் சேர்ந்த இருவரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டனர். பலரைக் காணவில்லை எனக் கூறப்படுகிறது. இதனிடையே, நேற்று இறந்தவர்கள் உடல்களை கொல்கத்தா நோக்கி பேரணியாக கொண்டு செல்ல முயன்ற பாஜகவினரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.

இதுதொடர்பாக பாஜகவை சேர்ந்த முகுல் ராய் கூறும்போது, பாஜக ஆதரவாளர்கள் மீது முதல்வர் மம்தா பானர்ஜி வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளார் என குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக மாநில பாஜக தலைமை உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் புகார் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து, மேற்குவங்க அரசிற்கு, மத்திய அரசு கடிதம் அளித்தது. அந்த கடிதத்தில், தொடரும் வன்முறை தொடர்பாக கடும் கவலை தெரிவித்தது. மேலும், மம்தா பானர்ஜி அரசு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை முறையாக கடைபிடிக்க தவறிவிட்டது என்றும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வன்முறையை கண்டிக்கும் வகையில் மேற்கு வங்கத்தில் இன்று முழு அடைப்புப் போராட்டத்துக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. இதனிடையே, மத்திய அரசு அளித்த கடிதத்திற்கு பதிலடியாக மேற்கு வங்க அரசு மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருப்பதாக தெரிவித்துள்ளது.

.