This Article is From Aug 11, 2020

உ.பி.யில் நடைபயிற்சிக்கு சென்ற பாஜக தலைவர் மர்மநபர்களால் சுட்டுக்கொலை!

இந்த சம்பவம் தொடர்பான காட்சிகளில் கோகரின் உடல் கரும்பு தோட்டத்திற்கு அடுத்ததாக, அவரது சட்டை இரத்த வெள்ளத்தில் நனைந்தபடி காணப்படுகிறது.

உ.பி.யில் நடைபயிற்சிக்கு சென்ற பாஜக தலைவர் மர்மநபர்களால் சுட்டுக்கொலை!

Uttar Pradesh:

உத்தரபிரதேசத்தில் பாஜக தலைவர் ஒருவர் தனது வீட்டுக்கு அருகிலுள்ள தோட்டத்தில் காலை நடைப் பயிற்சிக்காக வெளியே சென்ற போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர். 

பாஜகவின் முன்னாள் மாவட்டத் தலைவர் சஞ்சய் கோகர் மேற்கு உத்தர பிரதேசத்தின் பாக்பத்தில் உள்ள தனது கிராமத்திற்கு அருகே இன்று காலை உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். இதைத்தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்ட முதல்வர் யோகி ஆதித்யநாத் 24 மணி நேரத்திற்குள் அறிக்கை கேட்டுள்ளார்.

சஞ்சய் கோகர் தனக்குச் சொந்தமான தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தபோது துப்பாக்கியால் பலமுறை சுடப்பட்டுள்ளார். இதில் அவர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, இரத்தத்தில் நனைந்த படி கிடந்த அவரது உடல் சிறிது நேரத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டது. 

இந்த சம்பவம் தொடர்பான காட்சிகளில் கோகரின் உடல் கரும்பு தோட்டத்திற்கு அடுத்ததாக, அவரது சட்டை இரத்த வெள்ளத்தில் நனைந்தபடி காணப்படுகிறது. தொடர்ந்து, சம்பவ இடத்தில் போலீசார் மற்றும் பொதுமக்கள் என ஒரு பெரும் கூட்டம் கூடியிருந்தது. 

இந்த துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதுதொடர்பகா பாக்பாத் காவல்துறை அதிகாரி அஜய் குமார் கூறும்போது, முதற்கட்ட தகவல்களின் படி, விசாரணையை மேற்கொண்டோம். அதில், இது தனிப்பட்ட பகைக்காக நடந்த கொலை என்று தோன்றுகிறது. எனினும், நாங்கள் அதனை முழுமையாக விசாரித்து விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம். இந்த வழக்கில் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் யாரும் இல்லை என்று தெரிகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். 

கடந்த மாதம், ராஷ்டிரிய லோக் தளத் தலைவரான தேஷ்பால் கோகர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

.