This Article is From Sep 14, 2020

தமிழகத்தில் மாவட்ட வாரியாக (செப்.13) கொரோனா நிலவரம்!

சென்னையைப் பொறுத்தவரையில்  இன்று 994 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,48,584 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மாவட்ட வாரியாக (செப்.13) கொரோனா நிலவரம்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5,686 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்தது. 

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று 82,387 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 5,686 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,02,759 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 74 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 8,381 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரையில்  இன்று 994 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,48,584 ஆக அதிகரித்துள்ளது. 10,393 பேர சிகிச்சை பெற்று வருகின்றனர். 17 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.  இதனால் சென்னையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,676 ஆக அதிகரித்துள்ளது. 1228 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

மாவட்ட வாரியாக இன்று (செப்.13) புதியதாக பாதிக்கப்பட்டவர்கள் விவரம்:

அரியலூர் - 11

செங்கல்பட்டு - 299

சென்னை -994

கோவை - 490

கடலூர் - 251

தர்மபுரி - 39

திண்டுக்கல் - 68

ஈரோடு -133

கள்ளக்குறிச்சி - 126

காஞ்சிபுரம் - 186

கன்னியாகுமரி - 110

கரூர் - 48

கிருஷ்ணகிரி - 67

மதுரை - 78

நாகை - 154

நாமக்கல் - 124

நீலகிரி - 70

பெரம்பலூர் -23

புதுக்கோட்டை - 134

ராமநாதபுரம் - 16

ராணிப்பேட்டை - 130

சேலம் - 309

சிவகங்கை - 46

தென்காசி - 28

தஞ்சை - 151

தேனி - 88

திருப்பத்தூர் - 65

திருவள்ளூர் -300

திருவண்ணாமலை - 188

திருவாரூர் - 143

தூத்துக்குடி -45

திருநெல்வேலி - 126

திருப்பூர் - 291

 திருச்சி - 86

வேலூர் - 106

விழுப்புரம் - 128

விருதுநகர் - 35

.