This Article is From Sep 14, 2020

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியது! ஒரே நாளில் 74 பேர் பலி!!

இன்று மட்டும் 5,717 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக குணமடைந்தோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,47,366 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியது! ஒரே நாளில் 74 பேர் பலி!!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5,686 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்தது. 

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று 82,387 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 5,686 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,02,759 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 74 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 8,381 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரையில்  இன்று 994 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,48,584 ஆக அதிகரித்துள்ளது. 10,393 பேர சிகிச்சை பெற்று வருகின்றனர். 17 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.  இதனால் சென்னையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,676 ஆக அதிகரித்துள்ளது. 1228 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

.