This Article is From Mar 01, 2020

புலியோட இப்படியொரு படம்… ‘ப்பா… மெஜஸ்டிக்..!’

அதே படத்தை பிரவீன் கஸ்வான் பகிர்ந்து, “எந்த குடும்பம் ஒன்றாக குடிக்கிறதோ, அது ஒன்றாகவே இருக்கும். புலிகளுக்கும் இது பொருந்தும்” என்று எழுதியிருந்தார். 

புலியோட இப்படியொரு படம்… ‘ப்பா… மெஜஸ்டிக்..!’

இந்தப் படமானது காட்டுயிர் மற்றும் இயற்கை புகைப்படக் கலைஞர், வினோத் கோயல் மூலம், மகாராஷ்டிராவில் உள்ள அந்தாரி புலிகள் காப்பகத்தில் எடுக்கப்பட்டது.

ஹைலைட்ஸ்

  • 5 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட இது
  • மகாராஷ்டிரா புலிகள் காப்பகத்தில் எடுக்கப்பட்டது இந்தப் படம்
  • காட்டுயிர் புகைப்படக் கலைஞர் கோயல் இப்படத்தை எடுத்தார்

பாம்பைக் கண்டால் படை நடுங்கும் என்பார்கள். அது புலிக்கு அப்படியே பொருந்தும். கூண்டுக்குள் வைத்துப் பார்க்கும் போதே படுகம்பீரமாக காட்சி தரும் விலங்கு புலி. அப்படிப்பட்ட புலி, காட்டில் கூட்டமாக இருந்தால் எப்படி இருக்கும். அப்படியொரு நிகழ்வின் புகைப்படத்தைத்தான் ஐ.எப்.எஸ் அதிகாரியான பிரவீன் கஸ்வான் பகிர்ந்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள படத்தில், தாய் புலி கம்பீரமாகக் காட்டை நோட்டமிட, அது கொடுக்கும் பாதுகாப்பு உணர்வில் குட்டிப் புலிகள் நீர் அருந்துகின்றன. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்த படம் இது. இதை மீண்டும் பிரவீன் கஸ்வான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர, பலரும் ‘வாவ்' போட்டு வருகிறார்கள். பிரவீன் கஸ்வான், இந்தியக் காடுகள் மற்றும் விலங்குகள் தொடர்பாகத் தொடர்ந்து பல்வேறு தனித்துவமான படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்ந்து வருகிறார்.

இந்தப் படமானது காட்டுயிர் மற்றும் இயற்கை புகைப்படக் கலைஞர், வினோத் கோயல் மூலம், மகாராஷ்டிராவில் உள்ள அந்தாரி புலிகள் காப்பகத்தில் எடுக்கப்பட்டது. அதுதான் மகாராஷ்டிராவின் மிகப் பெரிய தேசியப் பூங்கா என்பது குறிப்பிடத்தக்கது. கோயல், இந்தப் படத்தை 2018 ஆம் ஆண்டு ஃபேஸ்புக்கில் பகிர்ந்தார். அவர் அந்தப் படம் குறித்து, ‘பிப்ரவரி 28, 2015 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட படம் இது. இந்தப் படத்தை எடுக்கும்போது அந்த புலிக் குட்டிகளுக்கு 5 மாத வயதிருக்கும்,' என எழுதியிருந்தார். 

அதே படத்தை பிரவீன் கஸ்வான் பகிர்ந்து, “எந்த குடும்பம் ஒன்றாகக் குடிக்கிறதோ, அது ஒன்றாகவே இருக்கும். புலிகளுக்கும் இது பொருந்தும்” என்று எழுதியிருந்தார். 

அவர் பகிர்ந்த படம்:
 

அவர் பகிர்ந்த படத்திற்கான ரியாக்‌ஷன்களைப் பாருங்க:
 

இந்தியாவில் இருக்கும் 50 புலிகள் காப்பகத்தில் ஒன்று அந்தாரி புலிகள் காப்பகம். பிராஜெக்ட் டைகர் என்னும் திட்டம் மூலம் உருவாக்கப்பட்ட புலிகள் காப்பகத்தில் இதுவும் ஒன்று. 1973 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் இந்த ப்ராஜெக்ட் உருவாக்கப்பட்டது. இந்த ப்ராஜெக்டின் திட்டம், வங்கப் புலிகளை அழிவிலிருந்து காப்பாற்றி அதை அதிகமாக்குவதுதான்.

Click for more trending news


.