This Article is From Mar 19, 2019

ஐ.நா. சபையில் இலங்கை தமிழர் பிரச்னையை எழுப்பிய கருணாஸ்!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த தீர்மானத்தை வலியுறுத்தி ஜெனிவாவில் நடைபெற்ற கூட்டத்தில் கருணாஸ் பேசினார்.

ஐ.நா. சபையில் இலங்கை தமிழர் பிரச்னையை எழுப்பிய கருணாஸ்!!

ஐ.நா. சபையில் திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ்

திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் ஐ.நா. சபையில் உரையாற்றினார்.

தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது கடந்த 2014 அக்டோபர் 24-ம்தேதி இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தார். அதில், இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும், காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது என்பது உள்ளிட்டவை இடம்பெற்றன. 

இதுகுறித்து கருணாஸ் ஜெனிவாவில் நடைபெற்ற 40-வது ஐ.நா. கூட்ட தொடரில் பேசினார். அப்போது, ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானத்தின் மீது மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குறிப்பிட்டார். 

பன்னாட்டு நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்ற ஐ.நா தீர்மானத்திற்கு மேலும் கால நீட்டிப்பு வழங்க கூடாது, இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்ததை இனப்படுகொலை என்று ஐ.நா அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்டவைகளை கருணாஸ் பதிவு செய்தார். 
 

.