This Article is From Dec 12, 2019

அயோத்தி வழக்கில் தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!!

அயோத்தி வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மறுஆய்வு மனுவில் அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்டவாரியம், நிர்மோகி அகோரா உள்ளிட்டோர் சம்பந்தப்பட்டுள்ளனர். இதேபோன்று சுமார் 40 அமைப்புகள் மறு ஆய்வு கோரி நீதிமன்றத்தை நாடினர்.

அயோத்தி வழக்கில் தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!!

மறு ஆய்வுக்காக சுமார் 40 அமைப்புகள் மறு ஆய்வு கோரி நீதிமன்றத்தை நாடினர்.

New Delhi:

அயோத்தி வழக்கில் தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட சீராய்வு மனுக்கள் அனைத்தையும் உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு மொத்தம் 18 சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது.  

உச்ச நீதிமன்றம் வழங்கிய அயோத்தி வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. 

அயோத்தி வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மறுஆய்வு மனுவில் அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்டவாரியம், நிர்மோகி அகோரா உள்ளிட்டோர் சம்பந்தப்பட்டுள்ளனர். இதேபோன்று சுமார் 40 அமைப்புகள் மறு ஆய்வு கோரி நீதிமன்றத்தை நாடினர்.

அமைதியை சீர்குலைப்பதற்காக இந்த மறுஆய்வு மனுவை தாக்கல் செய்யவில்லை என்று தெரிவித்துள்ள மனுதாரர்கள் அமைதி என்பது நீதிக்கு உகந்ததாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர். 

முஸ்லிம் மனுதாரர்கள், இந்த வழக்கு விவகாரத்தில் அமைதியையே விரும்புவதாகவும், ஆனால் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களையும் நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். 

முஸ்லிம் தரப்பு மனுதாரர்களில் ஒருவர், 'சட்டவிரோதமான முறையில் இடித்தது, அத்துமீறி சர்ச்சைக்குரிய இடத்திற்குள் நுழைந்தது, மசூதியை சேதப்படுத்தி அதனை இடித்தது உள்ளிட்ட குற்றச் செயல்கள் செய்யப்பட்டுள்ளன' என்று குறிப்பிட்டிருந்தார்.
வழக்குத் தொடர்ந்தவர்களில் ஒருவரான நிர்மோகி அகாரா, 'உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் எங்களுக்கு தெளிவு வேண்டும். கோயில் கட்டுவதற்கு குழுவை அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இதுபற்றிய தெளிவான விளக்கம் தேவை' என்று கூறியிருந்தது.

கடந்த நவம்பர் 9-ம்தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கியது. இதன்படி, சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலமானது வழக்குத் தொடர்ந்த ராம்லல்லாவுக்கு செல்ல வேண்டும் என்றும் அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதியளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக முஸ்லிம் தரப்புக்கு 5 ஏக்கர் நிலத்தை மசூதி கட்டுவதற்காக வழங்க வேண்டும். 

இடிக்கப்பட்ட பாபர் மசூதி இருந்த இடத்திற்கு முன்னால், கட்டிடம் ஒன்று இருந்ததாக தொல்லியில் துறை தெரிவித்துள்ளது. இருப்பினும் அது கோயில்தானா என்பது உறுதி செய்யப்படவில்லை. 1,045 பக்கம் உள்ள அயோத்தி தீர்ப்பில், முஸ்லிம்கள் பக்கம் வலுவான ஆதாரங்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

'இரு தரப்பு விவாதங்கள், எடுத்து வைக்கப்பட்டட ஆதாரங்களின் அடிப்படையில் இந்துக்கள் தரப்பில் வைக்கப்பட்ட வாதங்களும், ஆதாரங்களும் முஸ்லிம் தரப்பை விட வலுவானதாக இருந்தது' என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், அயோத்தி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட சீராய்வு மனுக்கள் அனைத்தையும் ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

.