This Article is From Nov 12, 2018

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: உச்ச நீதிமன்றத்தை நாடும் மாஜி பிரதமர் ரணில்!

இலங்கை நாடாளுமன்றத்தை சில நாட்களுக்கு முன்னர் கலைக்க உத்தரவிட்டார் அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: உச்ச நீதிமன்றத்தை நாடும் மாஜி பிரதமர் ரணில்!

இலங்கை நாடாளுமன்றத்தை சில நாட்களுக்கு முன்னர் கலைக்க உத்தரவிட்டார் அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா. இந்நிலையில் நாட்டின் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவில் ஐக்கிய தேசிய கட்சி, அதிபரின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக அறிவித்துள்ளது.

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சியின் கூட்டணியில் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி இடம் பெற்றிருந்தது. 2015 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் இந்தக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இந்தக் கூட்டணியில் சமீப காலமாக மோதல் போக்கு நிலவி வந்தது.

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும் இரு கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவியது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவிற்கு எதிரான சிறிசேனா ஆதரவாளர்கள் சிலர் கடந்த ஏப்ரல் மாதம் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு கொண்டு வந்தனர்.

இந்நிலையில், ரணில் விக்கிரமசிங்கே, பிரதமர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு, முன்னாள் அதிபர் ராஜபக்சே புதிய பிரதமராக நியமனம் செய்யப்பட்டார். ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இலங்கை சுதந்திர கட்சியின் கூட்டணி வாபஸ் பெற்றது.

அதைத் தொடர்ந்து, மொத்தம் 225 உறுப்பினர்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றம் நவம்பர் 16-ம்தேதி வரைக்கும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. முன்னதாக பெரும்பான்மையை நிரூபிக்க நாடாளுமன்றத்தை கூட்டுமாறு ரனில் விக்ரமசிங்கே கூறியிருந்தார். ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக நாடாளுமன்றத்தை கலைத்தார் அதிப்ர சிறிசேன.

அதிபரின் இந்த முடிவுக்கு ரணில் தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் அவரின் கட்சியைச் சேர்ந்த மங்கள சமரவீரா, ‘அடுத்த வாரமே உச்ச நீதிமன்றத்தில் அதிபரின் முடிவுக்கு எதிராக நாங்கள் வழக்கு தொடர உள்ளோம். அவர் செய்தது சட்ட விரோதம்' என்று கொதித்துள்ளார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.