This Article is From Aug 21, 2020

பிரணாப் முகர்ஜிக்கு நுரையீரல் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது: மருத்துவமனை தகவல்

இதையடுத்து, 84 வயதான அவர் தொடர்ந்து கோமாவில் இருந்து வருகிறார். அதிலிருந்து அவரது நிலை மோசமாகவே இருந்து வருகிறது. 

பிரணாப் முகர்ஜிக்கு நுரையீரல் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது: மருத்துவமனை தகவல்

பிரணாப் முகர்ஜிக்கு நுரையீரல் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது: மருத்துவமனை தகவல்

New Delhi:

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என டெல்லி ராணுவ மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. 

பிரணாப் முகர்ஜிக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் கூறும்போது, அவரது முக்கிய அளவுருக்கள் சீராக உள்ளன, வென்டிலேட்டர் ஆதரவுடன் அவர் இருந்து வருகிறார் என்றனர்.

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடந்த வாரம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த 10ஆம் தேதி அவர் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளை அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. 

இதையடுத்து, 84 வயதான அவர் தொடர்ந்து கோமாவில் இருந்து வருகிறார். அதிலிருந்து அவரது நிலை மோசமாகவே இருந்து வருகிறது. 

இதைத்தொடர்ந்து, அவருக்கு நுரையீரல் தொற்றுநோயும் ஏற்பட்டது. அதற்காக அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது சுகாதார அளவுருக்களை மருத்துவர்கள் நிபுணர்கள் குழு தீவிரமாக கண்காணித்து வருகிறது. 

இதுதொடர்பாக மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பிரணாப் முகர்ஜியின் மருத்துவ நிலை அப்படியே உள்ளது. அவர் நுரையீர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். வென்டிலேட்டர் உதவியுடன் இருந்த வருகிறார். அவரது முக்கிய அளவுருக்கள் சீராக உள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிரணாப் முகர்ஜி கடந்த 2012 முதல் 2017 வரை இந்தியாவின் 13வது குடியரசுத் தலைவராக பதவி வகித்தார்.
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.