This Article is From Sep 24, 2018

புகைப்படக்காரராக மாறிய பிரதமர் நரேந்திர மோடி..!

பிரதமர் நரேந்திர மோடி, சிக்கிமில் இருக்கும் பக்யாங் விமான நிலையத்தை திறந்து வைப்பதற்காக சென்றார்

புகைப்படக்காரராக மாறிய பிரதமர் நரேந்திர மோடி..!

தான் எடுத்த படங்களை, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார் பிரதமர் மோடி

Sikkim:

பிரதமர் நரேந்திர மோடி, சிக்கிமில் இருக்கும் பக்யாங் விமான நிலையத்தை திறந்து வைப்பதற்காக சென்றார். தனி விமானம் மூலம் சென்ற அவர், விமானத்தில் இருந்தபடியே சில அட்டகாசமான புகைப்படங்களை எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

புகைப்படங்களை தரவேற்றிய மோடி, ‘சிக்கிம் போகும் வழியில் இந்த புகைப்படங்களை எடுத்தேன். மிகவும் புத்துணர்வு தரும் காட்சி’ என்று பதிவிட்டுள்ளார். 

சிக்கிம் சென்ற மோடியை அம்மாநில ஆளுநர் கங்கா பிரசாத் மற்றும் முதல்வர் பவன் சாம்லிங் ஆகியோர் வரவேற்றனர். பக்யாங் விமான நிலையம், இந்திய-சீன எல்லையிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

பக்யாங் விமான நிலையத்துக்கான அடிக்கல் 9 ஆண்டுகளுக்கு முன்னர் நடப்பட்டது. ஆனால், தற்போது தான் அனைத்துப் பணிகளும் முடிந்து, விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் எடுத்த புகைப்படங்கள்:

uj7qt3q4

 

hcgblnsk

 

gkvo09f8

 

17dduueg

 

 

.