This Article is From Jun 23, 2020

சென்னையில் ஜூன் 23 ஆம் தேதி காலை நிலவரப்படி கொரோனா நிலவரம் என்ன..? - மண்டலவாரியாக விவரம்!

ஜூன் 23 ஆம் தேதி, காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 42,752 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஜூன் 23 ஆம் தேதி காலை நிலவரப்படி கொரோனா நிலவரம் என்ன..? - மண்டலவாரியாக விவரம்!

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 23,756 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சில நாட்களாக தொற்று அதிகரித்து வருகிறது
  • இதனால் மதுரையில் முழு முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
  • சென்னையில் தற்போது முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது

தமிழகத்தில் நேற்று 2,710 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 1,487 பேர். ஒட்டுமொத்த அளவில் 62,087 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 1,358 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 34,112 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 27,178 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 37 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 794 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

சென்னையில் மண்டலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம் (22.06.2020) வருமாறு:

திருவொற்றியூர் - 1,587

மணலி - 624

மாதவரம் - 1,191

தண்டையார்பேட்டை - 5,227

ராயபுரம் - 6,484

திரு.வி.க நகர் - 3,628

அம்பத்தூர் - 1,601

அண்ணா நகர் - 4,585

தேனாம்பேட்டை - 5,110

கோடம்பாக்கம் - 4,649

வளசரவாக்கம் - 1,784

ஆலந்தூர் - 965

 அடையாறு - 2,531

பெருங்குடி - 884

சோழிங்கநல்லூர் - 808

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 1,094

ஜூன் 23 ஆம் தேதி, காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 42,752 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 23,756 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 623 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தற்போது 18,372 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

சென்னையிலேயே அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 6,484 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தண்டையார்பேட்டை மண்டலத்திலும், தேனாம்பேட்டை மண்டலத்திலும் முறையே 5,227 மற்றும் 5,110 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மணலி மண்டலத்தில் மிகக் குறைவாக 624 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

.