This Article is From Jun 02, 2020

இதற்கு முன்னர் இல்லாத அளவுக்கு சென்னையில் உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு: மண்டலவாரி விவரம்!

ஜூன் 2 ஆம் தேதி, காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 15,770 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் இல்லாத அளவுக்கு சென்னையில் உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு: மண்டலவாரி விவரம்!

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 8,136 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • தமிழகத்திலேயே சென்னையில்தான் கொரோனா பாதிப்பு அதிகம்
  • சென்னையில் ராயபுரம் மண்டலத்தில்தான் கொரோனா பாதிப்பு அதிகம்
  • ராயபுரத்தில் கிட்டத்தட்ட 3,000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது

தமிழகத்தில் நேற்று 1,112 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 964 பேர். ஒட்டுமொத்த அளவில் 23,495 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 413 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 13,170 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தமிழகத்தில் நேற்று மட்டும் 11 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 184 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

சென்னையில் மண்டலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம் (01.06.2020) வருமாறு:

திருவொற்றியூர் - 534

மணலி - 222

மாதவரம் - 378

தண்டையார்ப்பேட்டை - 1,839

ராயபுரம் - 2,935

திரு.வி.க நகர் - 1,651

அம்பத்தூர் - 587

அண்ணா நகர் - 1,341

தேனாம்பேட்டை - 1,770

கோடம்பாக்கம் - 1,867

வளசரவாக்கம் - 890

ஆலந்தூர் - 229

 அடையாறு - 883

பெருங்குடி - 263

சோழிங்கநல்லூர் - 262

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 119

ஜூன் 2 ஆம் தேதி, காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 15,770 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 8,136 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 128 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தற்போது 7,387 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

சென்னையிலேயே அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 2,935 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து கோடம்பாக்கம் மண்டலத்திலும், தண்டையார்பேட்டை மண்டலத்திலும் முறையே 1,867 மற்றும் 1,839 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மணலி மண்டலத்தில் மிகக் குறைவாக 222 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

.