This Article is From Jul 03, 2020

2 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவை விட்டு வெளியேறிய தொழிலதிபர்; ரூ.350 கோடி வங்கி மோசடி!

கடந்த 2003ம் ஆண்டு முதல் அந்நிறுவனம் கடன் வசதிகளைப் பெற்றுள்ளதாக கனரா வங்கி தனது புகாரில் தெரிவித்துள்ளது

2 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவை விட்டு வெளியேறிய தொழிலதிபர்; ரூ.350 கோடி வங்கி மோசடி!

2 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவை விட்டு வெளியேறிய தொழிலதிபர்; ரூ.350 கோடி வங்கி மோசடி!(File)

ஹைலைட்ஸ்

  • ரூ.350 கோடி வங்கி மோசடி - இந்தியாவை விட்டு வெளியேறிய தொழிலதிபர்!
  • பஞ்சாப் பாஸ்மதி ரைஸ் லிமி. இயக்குநரான மஞ்சித் சிங் மக்னி என்பவர் மோசடி
  • 25.04.18ல் ‘செயல்படாத சொத்துக்கள்’ என வகைப்படுத்தப்பட்டது.
New Delhi:

கனரா வங்கி தலைமையிலான ஆறு வங்கிகளின் கூட்டமைப்பில் சுமார் ரூ.350 கோடி ரூபாய் பணமோசடி செய்த பஞ்சாப் பாஸ்மதி ரைஸ் லிமிடெட் இயக்குநரான மஞ்சித் சிங் மக்னி, நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அவர் கனடாவில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தொடர்ந்து, வங்கி புகாரின் அடிப்படையில், அமிர்தசரஸை சார்ந்த பஞ்சாப் பாஸ்மதி ரைஸ் லிமிடெட் மற்றும் அதன் இயக்குநர்கள் மஞ்சித் சிங் மக்னி, அவரது மகன் குல்விந்தர் சிங் மக்னி, அவரது மருமகள் ஜாஸ்மீத் கவுர், சில அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் ஆறு வங்கிகளில் மோசடியில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதல் தகவல் அறிக்கையில், அந்த நிறுவனம் நிலுவைத் தொகையை செலுத்துவதை நிறுத்தியுள்ளது. அந்நிறுவனம் கனரா வங்கியில் ரூ.175 கோடியும், ஆந்திர வங்கியில் ரூ.53 கோடியும், யுபிஐ வங்கியில் ரூ.44 கோடியும், ஓபிசி வங்கியில் ரூ.25 கோடியும், ஐடிபிஐ வங்கியில் ரூ.14 கோடியும், யூகோ வங்கியில் ரூ.41 கோடியும் கடன் பெற்றுள்ளது. 

கடந்த 2003ம் ஆண்டு முதல் அந்நிறுவனம் கடன் வசதிகளைப் பெற்றுள்ளதாக கனரா வங்கி தனது புகாரில் தெரிவித்துள்ளது. மேலும், 2012ம் ஆண்டில் அந்நிறுவனம் வங்கி கூட்டமைப்பு ஏற்பாட்டை தேர்வு செய்தனர். கனரா வங்கி தலைமையில் இந்த கூட்டமைப்பில், ஆந்திரா வங்கி, ஐடிபிஐ வங்கி, ஓபிசி, யுபிஐ மற்றும் யூகோ வங்கிகள் இருந்தன. 

அந்நிறுவனம் அசல் மட்டும், வங்கி தவணைகளை திருப்பிச் செலுத்த தவறியதால், கடந்த 25.04.18ல் ‘செயல்படாத சொத்துக்கள்' என வகைப்படுத்தப்பட்டது. ஆந்திர வங்கி 31.03.2018 அன்றும்; ஓ.பி.சி வங்கி 27.6.2018 அன்றும்; ஐ.டி.பி.ஐ 31.3.2018 அன்றும்; யு.பி.ஐ 30.4.2018 அன்றும் யூகோ வங்கி 31.3.2018 அன்றும் வரையறுத்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம், தனது சொந்த விசாரணைகளை மேற்கொண்ட வங்கிகள் பின்னர், வங்கி மோசடி செய்ததாக ரிசர்வ் வங்கிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர், கடந்த ஆண்டு மார்ச் மாதம் சிபிஐக்கு புகார் அளிக்க வங்கிக்கு அறிவுறுத்தப்பட்டாலும், அது இந்த ஆண்டு ஜூன் மாதம் மத்திய அமைப்புகளில் புகார் செய்துள்ளது.

.