This Article is From Jan 24, 2019

நண்பனை துண்டு துண்டாக வெட்டி கழிவறையில் 'ஃப்ளஷ்' செய்த நபர்; மும்பையில் கொடூரம்!

கணேஷ் கொடுக்க வேண்டிய 1 இலட்ச ரூபாய் லோன் குறித்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது

குற்றவாளியை போலீஸ் கைது செய்து விசாரித்து வருகின்றனர்

Mumbai:

பண பிரச்சனையில், நண்பனை கொன்று உடலை வெட்டி அதனை கழிவறையில் ஃப்ளஷ் செய்த அதிர்ச்சி சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.

இறந்தவர் பெயர் கணேஷ் விட்டால் கொல்ஹட்கர் என்றும் 35 வயதான அவருக்கு விரைவில் திருமணம் நடக்க இருந்தது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொலையாளியின் பெயர் பிந்தோவ் எனவும் தெரியவந்துள்ளது.

மும்பையில் உள்ள விரார் என்னும் இடத்தில் தான் இது நடந்துள்ளது. ஜனவரி 16 –ம் தேதி பிந்தோவும் கணேஷும் பிந்தோவின் வீட்டில் மது அருந்தினர். அப்போது கணேஷ் கொடுக்க வேண்டிய 1 இலட்ச ரூபாய் லோன் குறித்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது கணேஷை கொன்ற பிந்தோ, கணேஷின் உடலை துண்டு துண்டாக வெட்டி அதனை தன் கழிவறையில் ப்ளாஷ் செய்துள்ளார். எலும்புகளை ரெயிலில் இருந்து வெளியே எறிந்துள்ளார்.

விரார் இடத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது, மனித துண்டுகள் அடைந்து இருப்பதை கண்டுபிடித்து போலீஸார்க்கு தகவல் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், கணேஷின் பெற்றோர் கணேஷை காணவில்லை என போலீஸிடம் வழக்கு கொடுத்துள்ளனர்.

விசாரணையில், கழிவுநீர் தொட்டியில் இருந்த மனித உறுப்புகள் கணேஷ் உடையது எனவும் அவரை கொலை செய்தது பிந்தோவ் எனவும் கண்டுபிடித்துள்ளனர்.

பிந்தோவ்வை கைது செய்து அவரை போலீஸ் விசாரித்து வருகிறது.

.