This Article is From Nov 05, 2019

மகாராஷ்டிராவில் RSS தலையீட்டை எதிர்நோக்கும் சிவசேனா! மோகன் பகவத்திற்கு கடிதம்!!

மகாராஷ்டிரா சட்டமன்ற முடிவுகளைத் தொடர்ந்து, மாநிலங்களவைத் தேர்தலுக்கு முன்னர் பாஜக 50:50 அதிகாரப் பகிர்வுக்கு ஒப்புதல் தெரிவித்ததாக சிவசேனா கூறிவருகிறது.

மகாராஷ்டிராவில் RSS தலையீட்டை எதிர்நோக்கும் சிவசேனா! மோகன் பகவத்திற்கு கடிதம்!!

இந்த விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் தலையிட்டு பிரச்சினையை முடிவுகுக்கு கொண்டு வர வேண்டும் என சிவசேனா அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளது.

Mumbai:

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜக மற்றும் சிவசேனா இடையே தொடர்ந்து, அதிகாரப்பகிர்வு மோதல் நடந்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் சிவசேனா தற்போது ஆர்எஸ்எஸ் தலையீட்டை எதிர்நோக்கியுள்ளது. 

இதுதொடர்பான சிவசேனா மூத்த தலைவர் கிஷோர் திவாரி எழுதியுள்ள அந்த கடிதத்தில், கூட்டணி தர்மத்தை பாஜக கடைபிடிக்கவில்லை என்றும் இந்த விவகாரத்தில் மோகன் பகவத் தலையிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாஜக - சிவசேனா கூட்டணிக்கு மக்கள் பெரும் ஆதரவு தெரிவித்த நிலையிலும், பாஜக கூட்டணி தர்மத்தை கடைப்பிடிக்க மறுத்து வருகிறது. இதனால், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க தாமதமாகி வருகிறது. இதனால், ஆர்எஸ்எஸ் இந்த விவகாரத்தில் தலையிட்டு உடனடியாக பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

எனினும், ஆர்எஸ்எஸ் தரப்பில் இருந்த இந்த கடிதத்திற்கு எந்த பதிலும் இதுவரை வரவில்லை. தொடர்ந்து, தனது முடிவில் இருந்து சிவசேனாவும் பின்வாங்க மறுத்து வருகிறது. மேலும், சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில், 2014ல் பாஜகவின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு நடந்தோம், இந்த முறை அவ்வாறு இருக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. 

பாஜகவிடம் இருந்து எந்த பதிலும் வராதா நிலையில், சிவசேனா தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளது. 

மகாராஷ்டிர தேர்தலில் பாஜக - சிவசேனா கூட்டணி, மொத்தம் இருக்கும் 288 தொகுதிகளில் 161-ஐக் கைப்பற்றின. பாஜக, 105 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சிவசேனா, 56 இடங்களில் வெற்றியடைந்தது.

மகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி 12 நாட்கள் கடந்த நிலையிலும், ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜக மற்றும் சிவசேனா இடையே தொடர்ந்து, அதிகாரப்பகிர்வு மோதல் நடந்து வருகிறது. 50 சதவீத அதிகாரப்பகிர்வு, 2.5 வருடத்துக்கு சிவசேனாவுக்கு முதல்வர் பதவி, அமைச்சரவையில் சரிபாதி இடங்கள் என்ற திட்டத்தை சிவசேனா முன் வைத்துள்ளது. “லோக்சபா தேர்தலுக்கு முன்னர் 50:50 அதிகாரப் பகிர்வுக்கு அமித்ஷா ஒப்புக் கொண்டதாக சிவசேனா கட்சி கூறிவருகிறது. 

ஆனால், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா, மகாராஷ்டிராவின் முதல்வராக இருந்த தேவேந்திர ஃபட்னாவிஸ்தான், முதல்வராக தொடர வேண்டும் என்று கருதுகிறார்கள். சிவசேனாவின் நிலைப்பாட்டுக்கு எதிர்க்கட்சியான தேசியவாத காங்கிரஸ் ஆதரவு தெரிவித்திருந்தார். அக்கட்சியின் சரத் பவார், ‘சிவசேனாவின் நிபந்தனையில் எந்த தவறும் இல்லை,' என்று கூறினார். 

இதைத்தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவரை சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் சந்தித்திருந்தார். இந்த சந்திப்பின்போது, கூட்டணி தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என சஞ்சய் ராவத் தெரிவித்திருந்தார். 

.