This Article is From Sep 24, 2019

உ.பியில் 16 வயது சிறுமியை வன்புணர்வு செய்த மூவர் -அடித்து நொறுக்கிய ஊர் மக்கள்

Kaushambi gangrape: காவல்துறையில் கொடுத்த புகாரில் தன்னை தனியான இடத்திற்கு இழுத்து சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறியுள்ளார். சிறுமி தப்பிக்க முயன்றும் வயல்களில் தடுக்கி விழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரை சாகும் அளவிற்கு அடித்து உதைத்துள்ளனர்

ஹைலைட்ஸ்

  • 16 வயது சிறுமியை 3 பேர் பாலியல் வன்புணர்வு செய்தனர்
  • குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரை மக்கள் அடித்து உதைத்துள்ளனர்.
  • குற்றவாளி முகமது நஷிம் கைது செய்யப்பட்டுள்ளார்.
Lucknow:

உத்தர பிரதேச மாநிலம் கஸோம்பி மாவட்டத்தில் 16 வயது சிறுமியை 3 பேர் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும் அவர்கள் போன்களில் வீடியோவாக எடுத்து அதை வைராலாக்கியுள்ளனர்.

கிராமவாசிகள் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரை  வயலில் சாகும் அளவிற்கு அடித்து உதைத்துள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். 

வீடியோ காட்சிகளில் குற்றவாளிகள் மீதமுள்ள இருவரும் மக்களிடமிருந்து தப்பிக்க முயல்கின்றனர். முகம்மது நாசிம்  (20) கைது செய்யப்பட்டார். முகம்மது சோட்கா மற்றும் பாட்கா  இருவரும் தப்பி ஓடி வருகின்றனர். 

பாதிக்கப்பட்ட சிறுமி கால்நடைகளுக்காக பக்கத்து கிராமத்திற்கு சென்று தீவனம் சேகரிக்க சென்றுள்ளார். காவல்துறையில் கொடுத்த புகாரில் தன்னை தனியான இடத்திற்கு இழுத்து சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறியுள்ளார். சிறுமி தப்பிக்க முயன்றும் வயல்களில் தடுக்கி விழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

ஞாயிற்றுக் கிழமை பாலியல் பலாத்கார புகார் அளிக்க வந்தபோது சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தவறாக நடந்து கொண்ட இரு காவல்துறை அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினர் ஆரம்பத்தில் வழக்கு தாக்கல் செய்ய மறுத்து விட்டதாகவும், அவரது குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மை குறித்து கேள்வி எழுப்பியதாகவும் கூறப்படுகிறது. 

.