This Article is From Jul 19, 2018

‘யார் அதிகம் சம்பாதிப்பது’ நடிகையின் தற்கொலைக்கு பணம் தான் காரணமா?

வம்சம் என்ற சீரியல் மூலம் பிரபலமான பிரியங்கா, தனியாக பியூட்டி பார்லரும் நடத்தி வந்திருக்கிறார்

‘யார் அதிகம் சம்பாதிப்பது’ நடிகையின் தற்கொலைக்கு பணம் தான் காரணமா?
Chennai:

சென்னையில் தற்கொலை செய்து கொண்ட சின்னத் திரை நடிகை பிரியங்காவுக்கும் அவரது கணவருக்கும் இடையே வருமானம் தான் பிரச்சனையாக இருந்ததா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. வம்சம் என்ற சீரியல் மூலம் பிரபலமான பிரியங்கா, தனியாக பியூட்டி பார்லரும் நடத்தி வந்திருக்கிறார். அதனால் அவருக்கு நல்ல வருமானம் இருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால், அவரது கணவர் தனது பணியில் நல்ல வருமானம் ஈட்ட சிரம்மப்பட்டு வந்ததாகவும், தொழில் தொடங்க முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது. பிரயங்கா அதிக வருமானம் ஈட்டுவதால் தான் இருவருக்கும் இடையில் பிரச்சனை நிலவியதா என்பது போலீஸாரின் சந்தேகம். மேலும், பிரியங்கா அடிக்கடி பணி முடித்து இரவு தாமதமாக வருவதாலும், இருவருக்கும் இடையே பிரச்சனை இருந்ததாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. பிரயங்கா தற்கொலைக் கடிதம் எதையும் எழுதி வைக்காததால் இதில் குழப்பம் நீடிக்கிறது.

பிரியங்காவின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு மதுரையில் உள்ள அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. பிரியங்காவின் கணவர் கைது செய்யப்படவில்லை. ஆனால் அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

.