This Article is From May 30, 2020

சென்னையின் 6 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு கிடுகிடு உயர்வு: முழு விபரம் உள்ளே!

மே 30 ஆம் தேதி, காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 13,362 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் 6 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு கிடுகிடு உயர்வு: முழு விபரம் உள்ளே!

சென்னையிலேயே அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 2,446 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹைலைட்ஸ்

  • வட சென்னையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது
  • ராயப்பேட்டை மண்டலத்தில் 2000-ஐ தாண்டியுள்ளது கொரோனா பாதிப்பு
  • ஆலந்தூர் மண்டலத்தில் மிகக் குறைவான கொரோனா பாதிப்பு நிலவுகிறது

தமிழகத்தில் நேற்று 874 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 618 பேர். ஒட்டுமொத்த அளவில் 20,246 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 765 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 11,313 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் தற்போது 8,776 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 9 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 154 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

சென்னையில் மண்டலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம் (29.05.2020) வருமாறு:

திருவொற்றியூர் - 414

மணலி - 190

மாதவரம் - 298

தண்டையார்ப்பேட்டை - 1,425

ராயபுரம் - 2,446

திரு.வி.க நகர் - 1,437

அம்பத்தூர் - 539

அண்ணா நகர் - 1,143

தேனாம்பேட்டை - 1,500

கோடம்பாக்கம் - 1,678

வளசரவாக்கம் - 816

ஆலந்தூர் - 188

 அடையாறு - 745

பெருங்குடி - 226

சோழிங்கநல்லூர் - 233

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 84

மே 30 ஆம் தேதி, காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 13,362 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையிலேயே அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 2,446 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து கோடம்பாக்கம் மண்டலத்திலும், தேனாம்பேட்டை மண்டலத்திலும் முறையே 1,678 மற்றும் 1,500 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆலந்தூர் மண்டலத்தில் மிகக் குறைவாக 188 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 
 

.