This Article is From Nov 22, 2018

சென்னை டூ மைசூருக்கு 2 மணி நேரத்தில் பயணம் - ஜெர்மனி சொல்லும் மெகா ப்ளான்

சென்னையில் இருந்து மைசூருக்குக்கு செல்ல தற்போது 7 மணி நேரம் ஆகிறது. ஜெர்மனி கூறும் திட்டத்தை நிறைவேற்றினால் பயண நேரம் 2 மணியாக குறையும் என்று அந்நாடு தெரிவித்துள்ளது.

சென்னை டூ மைசூருக்கு 2 மணி நேரத்தில் பயணம் - ஜெர்மனி சொல்லும் மெகா ப்ளான்

சென்னையில் இருந்து மைசூருக்கு ரயிலில் செல்வதற்கு தற்போது 7 மணி நேரம் ஆகின்றன. பயண தூரத்தை குறைக்கும் முயற்சியில் தென்னக ரயில்வே ஈடுபட்டு வருகிறது.
இதுதொடர்பாக ஜெர்மனி அரசு திட்ட மாதிரியை தென்னக ரயில்வேயிடம் ஒப்படைத்துள்ளது. இதனை செயல்படுத்தினால் சென்னை - மைசூரு இடையிலான பயண நேரம் 7 மணியில் இருந்து 2 மணி நேரமாக குறையும் என ஜெர்மன் அரசு தெரிவித்திருக்கிறது.

சென்னைக்கும் - மைசூருவுக்கும் இடையே மொத்தம் 435 கிலோ மீட்டர். ஜெர்மனி முன்மொழியும் திட்டத்தை நிறைவேற்றும்போது, மணிக்கு அதிகபட்சம் 320 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்க முடியும்.

இந்த திட்டத்தை ஜெர்மனி தூதர் மார்ட்டின் நே, ரெயில்வே போர்டு சேர்மன் அஷ்வனி லோஹானியிடம் அளித்துள்ளார். இதனை நிறைவேற்றுவது தொடர்பான சாத்தியக்கூறுகளும் தென்னக ரயில்வேயிடம் அளிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து ஜெர்மனி தூதர் மார்ட்டின் நே கூறுகையில், “ஜெர்மனி அரசு அளித்த நிதியின் கீழ் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். மிகப்பெரும் அளவில் இடம் கையகப்படுத்தும் அவசியம் இதில் இருக்காது. இந்த திட்டத்தை விட மிகச் சிறந்த ஒன்று எங்களுக்கு இருப்பதாக தெரியவில்லை” என்றார்.

தென்னக ரயில்வேயிடம் ஜெர்மனி அளித்துள்ள திட்டத்தின்படி, சென்னை - அரக்கோணம் - பெங்களூரு - மைசூரு ஆகியவற்றிற்கு இடையே 85 சதவீத ரயில்வே தடங்கள் உயர்த்தப்படும். 11 மலைப்பாதைகள் ஏற்படுத்தப்படும். இதன் மூலமாக பயண நேரம் 7 மணியில் இருந்து 5 மணி நேரமாக குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

.